புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஏப்., 2013


முன்னணி நடிகைகள் பலரும் வரவில்லை .. மாலையில் வந்தார் கமல்!

நடிகர் சங்கத்தினர் இன்று நடத்திய உண்ணாவிரதத்தில் பெரும்பான்மை நடிகர்கள் ஆஜராகிவிட, பிற்பகலுக்குப் பிறகும்கூட முன்னணி நடிகைகள் வரவே இல்லை. காலையில் உண்ணாவிரதம்

நடிகர் சங்க உண்ணாவிரதம் முடிந்தது: 7 தீர்மானங்கள் நிறைவேற்றம்
lekha-foods.gif


தென் இந்திய நடிகர்-நடிகைகள் சார்பில் தி.நகரில் உள்ள தென்இந்திய  நடிகர் சங்க கட்டிட வளாகத்தில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இன்று ஒருநாள் உண்ணாவிரதம் நடந்தது.

நடிகர் சங்க தலைவர் சரத்குமார் உண்ணாவிரதத்துக்கு தலைமை தாங்கி னார். நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி, துணைத் தலைவர் விஜயகுமார், பொருளாளர் வாகை சந்திரசேகர் முன்னிலை வகித்தனர்.

காலில் கட்டுடன் உண்ணாவிரதத்திற்கு வந்த நடிகர் அஜீத்குமார் ( படங்கள் )
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் - நடிகைகள் இன்று சென்னையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர்.   இதில் ரஜினிகாந்த், கமல், சத்யராஜ்

 ஈழத்தமிழர்களுக்கு விடியல் பிறக்க வேண்டும் என
இறைவனை பிரார்த்திக்கிறேன் : நடிகர் விஜய் கடிதம்
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் - நடிகைகள் இன்று சென்னையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர். 

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் இன்று உண்ணாவிரதம்! போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: நடிகர்கள்! 7 தீர்மானங்கள் நிறைவேற்றம்!
ஈழத் தமிழருக்கு ஆதரவாகவும், தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் கொண்டு வந்த தனி ஈழ வாக்கெடுப்பு உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றக் கோரியும் இன்று நடிகர் சங்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

புங்குடுதீவு மான்மியம் 
புங்குடுதீவு மான்மியம் என்ற சுமார் 700 பக்கங்கள கொண்ட இந்த நூல் ஐரோப்பிய மண்ணில் வாழும் தமிழர்கள் பெற விரும்பினால் எம்மோடு தொடர்பு கொள்ளவும் சொற்ப பிரதிகளே  கைவசம் உண்டு 
காலத்தால் அழியாத புங்குடுதீவு மண்ணின் வியத்தகு அனைத்து அம்சங்களும் ஒருங்கே இணைக்கபட்ட ஒரு ஆவணச் சொத்து இந்த நூலாகும்
tthamil 8@gmail .com .


எங்கெங்கு திரும்பினாலும் மாணவர் போராட்டம். நடிகனுக்கு பாலாபிஷேகம் செய்யும் கூட்டம் என்று விமர்சிக்கப்பட்ட எம் இளைஞர் கூட்டம் இன்று நீதிக் கேட்டு வீதிக்கு வந்திருப்பதை பார்க்கையில் ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும், இதே எழுச்சி 2009-ல் வந்திருந்தால் வரலாறு திரும்பியிருக்குமே என்ற ஏக்கமும் வருகிறது.
முத்துகுமார் ஆசைப்பட்டதும் இதுபோன்ற ஒர் எழுச்சியை தான். மாணவர் எழுச்சியை ஒடுக்க கருணாவைப் போல் ஜெயாவும் தந்திரமாக கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டுப்பார்த்தும் ஒண்ணும் நடக்கவில்லை. காலம் கடந்தேனும் இந்த எழுச்சி ஏற்பட்டது கொண்டாடப்பட வேண்டியது. 
ஈழத் தமிழர்களுக்காக தே மு க நாடாளுமன்றத் தேர்தலை பகிஸ்கரிக்க போவதாக அறிவிப்பு 

பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவை மண்ணை கவ்வ வைக்கணும்! தேமுதிக கூட்டத்தில் விஜயகாந்த் பேச்சு
 

தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேரை 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் 01.04.2013 அன்று சென்னையில் நடந்தது.

போர்க்குற்ற விசாரணைக்குப்பின்னால் ஓடுவதனால் எந்தப்பயனும் இல்லை மக்கள் புரட்சியே வழி மாணவி திவ்யா காணொளி

போர்க்குற்ற விசாரணயை நம்பித்தான் தமிழீழ விடுதலைப்போராட்டமே இருக்கின்றது என்றும் இரு துருவங்கள் இருக்கின்றன. இவ்விரண்டையும் முற்றாக மறுக்காமலும்,

லோக்சபா தேர்தல்: அதிமுக விரித்த “ஈழம்’ வலை- சிக்கிய கட்சிகள்! உருவாகும் புதிய கூட்டணி!


என் உயிர் பிரிந்தால் உடலுக்கு புலிக்கொடி போர்த்துங்கள்: இயக்குநர் மணிவண்ணன்
01 04 2013

என்னிடம் எதுவும் இல்லை. உயிர்மட்டும்தான் உள்ளது. அதை எம் அரசியல் வாதிகள் எடுத்தால் எனது உடலுக்கு புலிக்கொடி போர்த்தி அடக்கம் செய்யுங்கள் என்று தம்பி சீமானுக்கு சொல்லி வைத்திருக்கிறேன். இவ்வாறு இயக்குநரும் நடிகருமான மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
அவரது இயக்கத்தில் அமைதிப்படை இரண்டாம் பாகம் படம் தயாராகிறது. அதன் இசை வெளியீட்டுவிழா நேற்று சென்னையில் நடைபெற்றது.  இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

அமைதிப் படை 2ம் பாகம் அரசியல் படம் என்று சொல்கிறார்கள். உண்மைதான். எந்த அரசியல் கட்சியையும் தலைவரையும் தனிப்பட்ட முறையில் தாக்காமல், சமகால அரசியலைச் சொல்லும் படம் இது. இதில் வரும் வசனங்களும் அப்படித்தான்.

 படத்தைப் பார்த்துவிட்டு தமது இயலாமையை வெளிப்படுத்த என் வீட்டு மீது ஒரு கல் விழுந்தாலும், தமிழகத்தில் ஒரு அரசியல்வாதியும் மேடை போட்டுப் பேசமுடியாத நிலை ஏற்படும். புலிப்படை அதைப் பார்த்துக் கொள்ளும் என்றார்.

நன்றி தமிழ் இணையங்கள்
என் உயிர் பிரிந்தால் உடலுக்கு புலிக்கொடி போர்த்துங்கள்: இயக்குநர் மணிவண்ணன்
01 04 2013


ன்னிடம் எதுவும் இல்லை. உயிர்மட்டும்தான் உள்ளது. அதை எம் அரசியல் வாதிகள் எடுத்தால் எனது உடலுக்கு புலிக்கொடி போர்த்தி அடக்கம் செய்யுங்கள் என்று தம்பி சீமானுக்கு சொல்லி வைத்திருக்கிறேன். இவ்வாறு இயக்குநரும் நடிகருமான மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

"அவசர செய்தி "
கருங்கல் நகரில் கலவரம்" மனித சங்கிலி போராட்டம் நடத்த வந்த அணைத்து கல்லுரி மாணவர்கள் மீது காங்கிரஸ் குண்டர்கள் வன்முறை ,தடியடி ,பேனர்கள் கிழிப்பு ,காங்கிரஸ் எதிர்த்தாலும் மாணவர்கள் வெற்றிகரமாக போராட்டம் நடைபெற்று கொண்டிருகிறது .
 காங்கிரஸ் கைக்கூலி ராஜேஷ் குமாரை வன்மையாக கண்டிக்கிறோம்
"அவசர செய்தி "
கருங்கல் நகரில் கலவரம்" மனித சங்கிலி போராட்டம் நடத்த வந்த அணைத்து கல்லுரி மாணவர்கள் மீது காங்கிரஸ் குண்டர்கள் வன்முறை ,தடியடி ,பேனர்கள் கிழிப்பு ,காங்கிரஸ் எதிர்த்தாலும் மாணவர்கள் வெற்றிகரமாக போராட்டம் நடைபெற்று கொண்டிருகிறது .

1 ஏப்., 2013


"சிறப்புமுகாம்கள் எனும் பெயரில் செயல்படும் வதை முகாம்கள்"
==================
ஜெர்மனியில் யூதர்களை வதைப்பதற்காக வதைமுகாம்கள் எவ்வாறு ஹிட்லரால் நடத்தப்பட்டதோ, ஈழத்தில் சிங்களர்கள் எவ்வாறு வதை முகாம்களை நடத்தி வருகிறார்களோ அதற்கு சற்றும் குறையாத வகையில் தமிழகத்தில் இரண்டு வதைமுகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? 

தமிழகத்தில் செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி ஆகிய இரண்டு இடங்களில் இப்படியான இரண்டு சிறப்பு(வதை)முகாம்கள் செயல்பட்டு வருகிறது. நீதித்துறையின் எந்த கண்காணிப்பிலும் வராத இந்த சிறப்பு(வதை)முகாம்களில் அடைக்கப்படுவதற்கு அவன் எந்த குற்ற செயல்களில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களோ, புகார்களோ அல்லது குற்றங்கள் நிருபிக்கப்பட்டிருப்பதோ எதுவுமே தேவையில்லை. அவன் ஈழ தமிழனாக பிறந்த ஒரே ஒரு தகுதி இருந்தால் போதும் . இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத தமிழகத்தில் மட்டுமே இருக்கும் கியூ பிரிவு போலீசார் ஒருவனை கைது செய்தால் அவனை நீதி மன்றத்தில் நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. அவன் மீது எந்த குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்படவேண்டிய அவசியம் இல்லை. அவனை எந்த நீதித்துறையின் கண்காணிப்பிலும் இல்லாத இந்த வதைமுகாம்களில் அடைத்துவிடலாம். இவர்களை அடைக்க வெளிநாட்டினர் சட்டம் என்ற சட்டப்பிரிவை காரணமாக காட்டினால் போதுமானது. சிறைவாசிகளுக்கு இருக்கும் அடிப்படை வசதிகள் கூட இல்லாத இந்த வதை முகாம்களில் அடைக்கப்பட்டவர்களுக்கு எந்த காரணத்திற்க்காக கைது செய்யப்பட்டோம் எப்பொழுது விடுவிக்கப்படுவோம் என்ற அடிப்படை தகவல்கள் கூட தெரிவிக்கப்படுவதில்லை, இதில் முக்கியமான விடயம் இவர்களின் தண்டனை காலத்தை எந்த நீதிமன்றங்களும் முடிவு செய்வதில்லை என்பது தான். இப்படி சட்டத்திற்கு புறம்பாக அடைக்கப்பட்டவர்கள் தங்களின் மேல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யக்கோரியும், வழக்கை விரைவாக விசாரிக்க கோரியும், நீதிமன்றத்தால் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து தங்களை தடுத்து வைத்திருப்பதை எதிர்த்தும் உண்ணாவிரதம் இருப்பது தொடர்கதையாகி வருகிறது. 

ஆனால் இந்த முறை பூந்தமல்லி சிறப்பு முகாமில் சந்திரகுமார் என்பவர் உண்ணாவிரதம் இருக்கும் காரணமே வேறு.

பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்களுக்கு அடிப்படை தேவைகளுக்காக அரசாங்கத்தால் ஒரு நாளைக்கு 70 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது, இந்த ரூபாயில் தான் இவர்களின் அனைத்து தேவைகளையும் இவர்கள் கவனித்துக்கொள்ளவேண்டும். இந்த தொகையில் பாதி இவர்களுக்கு பொருட்கள் வாங்கி தரும் தலையாரிக்கே செலவாகிவிடும் என்பதே உண்மை. இதனால் இந்த தொகை தங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லையென்று இந்த தொகையை உயர்த்தி தரவேண்டும் அல்லது அரசாங்கமே தங்களின் தேவையை பூர்த்தி செய்யவேண்டும் என்று பூந்தமல்லி சிறப்பு முகாம் வாசிகள் கடந்த 9 மாதங்களாக இந்த தொகையை வாங்க மறுத்து புறக்கணித்து வந்தனர். அவர்களுக்கான அடிப்படை தேவைகளை அவர்களை பார்க்க வரும் உறவினர்கள் மூலம் பூர்த்தி செய்து வந்தனர். ஆனால் கடந்த 20 நாட்களாக அவர்களை பார்க்க வரும் எந்த உறவினர்களையும் கியூ பிரிவினர் அனுமதிப்பதில்லை. இனி 10 நாட்களுக்கு முன் அனுமதி வாங்கினால் மட்டுமே பார்க்க அனுமதிக்க முடியும் என்று அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வந்தனர். இதனால் சிறப்பு முகாமில் இருப்பவர்கள் கடந்த இருபது நாட்களாக வெளியிலிருந்து எந்த உணவு பொருட்களும் கிடைக்காமல் தனிமைபடுத்தப்பட்டனர். உறவினர்கள் சந்திப்பதற்கு வெளிநாட்டினர் சட்டபிரிவில் எந்த இடத்திலும் இல்லாத இந்த கெடுபிடிகளை எதிர்த்து 27/03/2013 முதல் சந்திரகுமார் என்பவர் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். சந்திரகுமாரை பார்க்க வந்த அவர் மனைவிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவரும் சிறப்பு முகாம் வாசலிலேயே உண்ணாவிரதத்தை தொடர்ந்துவந்தார். இந்நிலையில் இன்று மாலை உண்ணாவிரதம் சந்திரகுமாரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் இரண்டு குழந்தைகள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. ஒருவனை சிறையைவிட கொடுமையான இடத்தில் தனிமைபடுத்தி அவனின் அடிப்படை தேவையான உணவை கூட தராமலும், அவனாகவே அவனது தேவையை நிரைவெற்றிக்கொள்வதை கூட அனுமதிக்காத நாடு தன்னைத்தானே காந்திய நாடு என்று சொல்லிக்கொள்வது மிகப்பெரிய முரண்பாடாகும். 

தமிழக சொந்தங்களே ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு நீதிகேட்டு நாம் களத்திலிறங்கி போராடிவரும் அதே நேரத்தில் நம் கண்ணெதிரே துன்பப்படும் இந்த சொந்தங்களுக்காகவும் நாம் போராட வேண்டும். உலகின் எந்த மூளையில் தமிழர்கள் பாதிக்கப்பட்டாலும் நாம் தொடர்ந்து போராடி நமக்கான உரிமையை வென்றெடுக்க வேண்டும்.
"சிறப்புமுகாம்கள் எனும் பெயரில் செயல்படும் வதை முகாம்கள்"
ஜெர்மனியில் யூதர்களை வதைப்பதற்காக வதைமுகாம்கள் எவ்வாறு ஹிட்லரால் நடத்தப்பட்டதோ, ஈழத்தில் சிங்களர்கள் எவ்வாறு வதை முகாம்களை நடத்தி வருகிறார்களோ அதற்கு சற்றும் குறையாத வகையில் தமிழகத்தில் இரண்டு வதைமுகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

தமிழகத்தில் செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி ஆகிய இரண்டு இடங்களில் இப்படியான இரண்டு
2009 மக்களவையில் தயாநிதி மாறன் பங்கேற்ற விவாதங்களின் எண்ணிக்கை 1. கேட்ட கேள்விகளின் எண்ணிக்கை 0.

ஆணியே பிடுங்காத தயாநிதி மாறன் பாராளுமன்றத்துக்கு போனால் என்ன போகாவிட்டால் என்ன ? 
http://www.thehindu.com/news/national/tamil-nadu/constant-vigil-needed-to-ensure-development-say-active-tn-mps/article4567406.ece

தயவுசெய்து இதனை SHARE செய்யுங்கள்..

SHARE & Like the page here-->>@[293309174033072:274:World Wide Tamil People]

அவசர செய்தி "காங்கிரஸ் என்ன குண்டாவா கருங்கல் லுகே சவாலா ?இந்தபடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா ? காங்கிரஸ் கைகூலிகள் ஓட்டம்..
குமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கோட்டை உடைகிறது ,மாணவர் போராட்டம் வெல்லட்டும்



அவசர செய்தி "காங்கிரஸ் என்ன குண்டாவா கருங்கல் லுகே சவாலா ?இந்தபடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா ? காங்கிரஸ் கைகூலிகள் ஓட்டம்..
குமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கோட்டை உடைகிறது ,மாணவர் போராட்டம் வெல்லட்டும்

இனி தமிழீழம் என்ற ஒன்று வேண்டுமெனில் முதற்கட்டமாய் காங்கிரசை வேரோடு களைந்தெடுக்க வேண்டும். டெசோ மாநாடு தீர்மானம் தொடங்கும்போது ஈழம் என்ற வார்த்தையை உச்சரிக்க கூடாது என்று மத்திய அரசு சொன்னதும் இரவோடு இரவாக ஒட்டிய சுவரொட்டியில் கருப்பு மை கொண்டு ஈழம் என்ற வார்த்தையை அழித்த வெட்கங்கெட்ட திமுக இன்று காங்கிரஸ் இரட்டை வேடம் போடுவதாக சொல்லிக் கொண்டிருக்கின்றது. என் நாட்டில் என் மக்களுக்காக நான் ஈழம் என்றுதான் சொல்வேன்...அப்படி ஒரு கூட்டணி எனக்கு தேவையில்லை என்று சொல்ல நாதியில்லை!!

இன்று அதே "ஈழம்" என்ற வார்த்தையை பயன்படுத்தி ஞானதேசிகன் மற்றும் தமிழக காங்கிரஸ்,  மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு என்று சுவரொட்டி அடித்ததை என்ன வென்று சொல்வது??.....இதை விட வெட்ககேடான விஷயம் காங்கிரசிற்கு இருக்க முடியாது..

இந்த போராட்டத்தில் யாருக்கு தகுதி கிடையாது..

காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிக்கு சுத்தமாக தகுதியே கிடையாது என்பது பரவலாக பேசப் படும் செய்தி.   அதிமுக மட்டும் என்ன ஒழுங்கா? என்று கேள்வி கேட்பவர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். ஆரம்பத்தில் விடுதலை புலிகள் இயக்கத்தை தடை செய்ய வேண்டும் சொன்னதும் இந்த செயலலிதாதான்...ஆனால் அதே செயலலிதா இன்று ராஜபக்சேவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார். அது அரசியல் நாடகமோ அல்லது நிசமோ??? ஆனால் அந்த நாடகத்தை கூட நடத்த வக்கில்லாமல் உதவி செய்வது போல் நம்பவைத்து கழுத்தருத்தது யார்? ஒரு கட்டத்தில் குடும்ப மானமா? கட்சி மானமா? என்ற கேள்வி வந்த போது என்ன செய்தது திமுக என்பது உலகறிந்த விசயமே? இப்போது கூட ஜெனீவாவில்  நடந்த தீர்மானத்திற்கு இந்திய தெரிவித்த விருப்பமில்லா ஆதரவு கூட மாணவர்கள் போராட்டத்தின் வெளிப்பாடுதானே தவிர கலைஞர் நடத்திய டெசோ காமெடி மாநாட்டிற்கு அல்ல...என்பதை மாணவர்கள் நன்கறிவார்கள். அவர் என்னமோ நான் டெசோ மாநாடு நடத்தினதாலே தான் இந்த ஆதரவு என்று படம் காட்டிக் கொண்டிருக்கின்றார்.

இன்னமும் டி.ஆர் பாலு எங்கே என்ன செய்து கொண்டிருக்கின்றார்? ராஜினாமா செய்துவிட்டாரா என்று தெரியவில்லை...அழகிரி தனியாக சென்று ராஜினாமா செய்கின்றார். அவர்களுக்குள்ளாகவே ஒரு குழப்பம், தலைவர் வழக்கம் போல ராஜினாமா என்று சொல்வார், ஆனால் செய்யமாட்டார் என்று எதிர்பார்த்து காத்திருப்பது போல் ஒரு பரிதவிப்பு.

மாணவர்கள் தமிழீழம் என்ற பிரச்சினைக்கு மட்டும் போராடக் கூடாது...காங்கிரஸ் என்ற கட்சியை எப்படி வேரறுப்பது என்ற கோணத்திலும்... நாம் நேரடியாக அரசியில் களத்தில் இறங்கி போராட வேண்டும். அப்போதுதான் அவர்கள் நம் வழிக்கு வருவார்கள்.
இனி தமிழீழம் என்ற ஒன்று வேண்டுமெனில் முதற்கட்டமாய் காங்கிரசை வேரோடு களைந்தெடுக்க வேண்டும். டெசோ மாநாடு தீர்மானம் தொடங்கும்போது ஈழம் என்ற வார்த்தையை உச்சரிக்க கூடாது என்று மத்திய அரசு சொன்னதும் இரவோடு இரவாக ஒட்டிய சுவரொட்டியில் கருப்பு மை கொண்டு ஈழம் என்ற வார்த்தையை அழித்த வெட்கங்கெட்ட திமுக இன்று காங்கிரஸ் இரட்டை வேடம் போடுவதாக சொல்லிக் கொண்டிருக்கின்றது. என் நாட்டில் என் மக்களுக்காக நான் ஈழம் என்றுதான் சொல்வேன்...அப்படி ஒரு கூட்டணி எனக்கு தேவையில்லை என்று சொல்ல நாதியில்லை!!

இன்று அதே "ஈழம்" என்ற வார்த்தையை பயன்படுத்தி ஞானதேசிகன் மற்றும் தமிழக காங்கிரஸ், மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு என்று சுவரொட்டி அடித்ததை என்ன வென்று சொல்வது??.....இதை விட வெட்ககேடான விஷயம் காங்கிரசிற்கு இருக்க முடியாது..

இந்த போராட்டத்தில் யாருக்கு தகுதி கிடையாது..

காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிக்கு சுத்தமாக தகுதியே கிடையாது என்பது பரவலாக பேசப் படும் செய்தி. அதிமுக மட்டும் என்ன ஒழுங்கா? என்று கேள்வி கேட்பவர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். ஆரம்பத்தில் விடுதலை புலிகள் இயக்கத்தை தடை செய்ய வேண்டும் சொன்னதும் இந்த செயலலிதாதான்...ஆனால் அதே செயலலிதா இன்று ராஜபக்சேவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார். அது அரசியல் நாடகமோ அல்லது நிசமோ??? ஆனால் அந்த நாடகத்தை கூட நடத்த வக்கில்லாமல் உதவி செய்வது போல் நம்பவைத்து கழுத்தருத்தது யார்? ஒரு கட்டத்தில் குடும்ப மானமா? கட்சி மானமா? என்ற கேள்வி வந்த போது என்ன செய்தது திமுக என்பது உலகறிந்த விசயமே? இப்போது கூட ஜெனீவாவில் நடந்த தீர்மானத்திற்கு இந்திய தெரிவித்த விருப்பமில்லா ஆதரவு கூட மாணவர்கள் போராட்டத்தின் வெளிப்பாடுதானே தவிர கலைஞர் நடத்திய டெசோ காமெடி மாநாட்டிற்கு அல்ல...என்பதை மாணவர்கள் நன்கறிவார்கள். அவர் என்னமோ நான் டெசோ மாநாடு நடத்தினதாலே தான் இந்த ஆதரவு என்று படம் காட்டிக் கொண்டிருக்கின்றார்.

இன்னமும் டி.ஆர் பாலு எங்கே என்ன செய்து கொண்டிருக்கின்றார்? ராஜினாமா செய்துவிட்டாரா என்று தெரியவில்லை...அழகிரி தனியாக சென்று ராஜினாமா செய்கின்றார். அவர்களுக்குள்ளாகவே ஒரு குழப்பம், தலைவர் வழக்கம் போல ராஜினாமா என்று சொல்வார், ஆனால் செய்யமாட்டார் என்று எதிர்பார்த்து காத்திருப்பது போல் ஒரு பரிதவிப்பு.

மாணவர்கள் தமிழீழம் என்ற பிரச்சினைக்கு மட்டும் போராடக் கூடாது...காங்கிரஸ் என்ற கட்சியை எப்படி வேரறுப்பது என்ற கோணத்திலும்... நாம் நேரடியாக அரசியில் களத்தில் இறங்கி போராட வேண்டும். அப்போதுதான் அவர்கள் நம் வழிக்கு வருவார்கள்.

இன்று கொரியா தமிழ் நண்பர்கள் சார்பாக "இலங்கை தமிழர்கள் இனப்படுகொலையை கண்டித்தும், அதற்கான நீதி கேட்டும், தமிழ் நாடு மாணவர்களின் போராத்திற்கு எங்கள் ஆதரவை தெரிவித்தும் "Seoul National University"யில் நடை பெற்ற போராட்டம்.
இன்று கொரியா தமிழ் நண்பர்கள் சார்பாக "இலங்கை தமிழர்கள் இனப்படுகொலையை கண்டித்தும், அதற்கான நீதி கேட்டும், தமிழ் நாடு மாணவர்களின் போராத்திற்கு எங்கள் ஆதரவை தெரிவித்தும் "Seoul National University"யில் நடை பெற்ற போராட்டம்.

தென்கொரியா மீது வடகொரியா தாக்குதல்!- இலங்கைப் பணியாளர்களை நாட்டுக்கு அழைக்க நடவடிக்கை
தென்கொரியாவின் மீது வடகொரியா திடீரென தாக்குதல் நடத்துமாயின் அங்குள்ள இலங்கை பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கவனம் செலுத்தி வருகின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய அரசியல் நிலைப்பாட்டை அக்கட்சி மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
புல்மோட்டை, ஜின்னாபுரம் எனுமிடத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போது அவர் மேற்கொண்டவாறு குறிப்பிட்டார். 

ad

ad