என் உயிர் பிரிந்தால் உடலுக்கு புலிக்கொடி போர்த்துங்கள்: இயக்குநர் மணிவண்ணன்
01 04 2013
என்னிடம் எதுவும் இல்லை. உயிர்மட்டும்தான் உள்ளது. அதை எம் அரசியல் வாதிகள் எடுத்தால் எனது உடலுக்கு புலிக்கொடி போர்த்தி அடக்கம் செய்யுங்கள் என்று தம்பி சீமானுக்கு சொல்லி வைத்திருக்கிறேன். இவ்வாறு இயக்குநரும் நடிகருமான மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
அவரது இயக்கத்தில் அமைதிப்படை இரண்டாம் பாகம் படம் தயாராகிறது. அதன் இசை வெளியீட்டுவிழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
அமைதிப் படை 2ம் பாகம் அரசியல் படம் என்று சொல்கிறார்கள். உண்மைதான். எந்த அரசியல் கட்சியையும் தலைவரையும் தனிப்பட்ட முறையில் தாக்காமல், சமகால அரசியலைச் சொல்லும் படம் இது. இதில் வரும் வசனங்களும் அப்படித்தான்.
படத்தைப் பார்த்துவிட்டு தமது இயலாமையை வெளிப்படுத்த என் வீட்டு மீது ஒரு கல் விழுந்தாலும், தமிழகத்தில் ஒரு அரசியல்வாதியும் மேடை போட்டுப் பேசமுடியாத நிலை ஏற்படும். புலிப்படை அதைப் பார்த்துக் கொள்ளும் என்றார்.
நன்றி தமிழ் இணையங்கள்
01 04 2013
என்னிடம் எதுவும் இல்லை. உயிர்மட்டும்தான் உள்ளது. அதை எம் அரசியல் வாதிகள் எடுத்தால் எனது உடலுக்கு புலிக்கொடி போர்த்தி அடக்கம் செய்யுங்கள் என்று தம்பி சீமானுக்கு சொல்லி வைத்திருக்கிறேன். இவ்வாறு இயக்குநரும் நடிகருமான மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
அவரது இயக்கத்தில் அமைதிப்படை இரண்டாம் பாகம் படம் தயாராகிறது. அதன் இசை வெளியீட்டுவிழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
அமைதிப் படை 2ம் பாகம் அரசியல் படம் என்று சொல்கிறார்கள். உண்மைதான். எந்த அரசியல் கட்சியையும் தலைவரையும் தனிப்பட்ட முறையில் தாக்காமல், சமகால அரசியலைச் சொல்லும் படம் இது. இதில் வரும் வசனங்களும் அப்படித்தான்.
படத்தைப் பார்த்துவிட்டு தமது இயலாமையை வெளிப்படுத்த என் வீட்டு மீது ஒரு கல் விழுந்தாலும், தமிழகத்தில் ஒரு அரசியல்வாதியும் மேடை போட்டுப் பேசமுடியாத நிலை ஏற்படும். புலிப்படை அதைப் பார்த்துக் கொள்ளும் என்றார்.
நன்றி தமிழ் இணையங்கள்