மக்கள் திலகம் மறைந்தபோது கவிஞர் வாலி அவர்கள் "ஆனந்த விகடன்" (3/1/1988) இதழில் எழுதிய அஞ்சலிக் கவிதை
நான் யாரைப் பாடுவேன்?
பொன்மனச் செம்மலே! என் பொழுது புலரக் கூவிய சேவலே!
உனக்கென்று நான் எழுதிய முதல் வரியில் தான் - உலகுக்கு என் முகவரி தெரிய வந்தது!
என் கவிதா விலாசம் உன்னால்தான் விலாசமுள்ள கவிதை ஆயிற்று!
இந்த நாட்டுக்குச் சோறிடு முன்னமே என் பாட்டுக்குச் சோறிட்டவன் நீ!
என்னை வறுமைக் கடல்மீட்டு.., வாழ்க்கைக்கரை சேர்த்த படகோட்டியே!
கருக்கிருட்டில் என் கண்களில் தென்பட்ட கலங்கரை விளக்கமே!
நான் பாடிய பாடல்களை நீ பாடிய பிறகுதான் நாடு பாடியது - ஏழை எளியவர்களின் வீடு பாடியது!
இல்லையென்று இரப்போர்க்கு இல்லையென்று சொல்லாதவன் - இன்று
இல்லையென்று போனான் - இனி நான் யாரைப் பாடுவேன்?
புரட்சித் தலைவனே! நீ இருந்தபோது - உன் அடக்கத்தைப் பார்த்து நாடு தொழுதது..,
இன்று இறந்த பின்பு உன் அடக்கத்தைப் பார்த்து - நாடு அழுதது!
வைகை யாறும் பொன்னி யாறும் வற்றிப் போகலாம்;
நான் யாரைப் பாடுவேன்?
பொன்மனச் செம்மலே! என் பொழுது புலரக் கூவிய சேவலே!
உனக்கென்று நான் எழுதிய முதல் வரியில் தான் - உலகுக்கு என் முகவரி தெரிய வந்தது!
என் கவிதா விலாசம் உன்னால்தான் விலாசமுள்ள கவிதை ஆயிற்று!
இந்த நாட்டுக்குச் சோறிடு முன்னமே என் பாட்டுக்குச் சோறிட்டவன் நீ!
என்னை வறுமைக் கடல்மீட்டு.., வாழ்க்கைக்கரை சேர்த்த படகோட்டியே!
கருக்கிருட்டில் என் கண்களில் தென்பட்ட கலங்கரை விளக்கமே!
நான் பாடிய பாடல்களை நீ பாடிய பிறகுதான் நாடு பாடியது - ஏழை எளியவர்களின் வீடு பாடியது!
இல்லையென்று இரப்போர்க்கு இல்லையென்று சொல்லாதவன் - இன்று
இல்லையென்று போனான் - இனி நான் யாரைப் பாடுவேன்?
புரட்சித் தலைவனே! நீ இருந்தபோது - உன் அடக்கத்தைப் பார்த்து நாடு தொழுதது..,
இன்று இறந்த பின்பு உன் அடக்கத்தைப் பார்த்து - நாடு அழுதது!
வைகை யாறும் பொன்னி யாறும் வற்றிப் போகலாம்;