புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 நவ., 2012


அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமாவின் இரண்டாவது ஆட்சிக்காலத்தின்போது இலங்கை விவகாரங்களைக் கையாள்வதற்கான விசேட அரச உயர்மட்டக் குழு ஒன்று தனியாக ஏற்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்மூலம் இலங்கைக்கான நெருக்கடிகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் நம்பிக்கையான வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுவரை காலமும் இலங்கை விவகாரங்களை ஆசிய பிராந்தியத்துக்கான அமெரிக்க இராஜதந்திரிமாரே கையாண்டு வந்தபோதிலும் ஜனாதிபதி ஒபாமாவின் புதிய நிர்வாகத்தின் கீழ் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களமே நேரடியாக இலங்கை விவகாரங்களை நேரடியாகக் கையாளவுள்ளது.

ஜனாதிபதி ஒபாமா ஜனவரியில் மீண்டும் சத்தியப்பிரமாணம் செய்யும்போது இராஜாங்கத் திணைக்களத்தின் உயர்மட்டப் பதவிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ள வேளையில் ஆசிய விவகாரங்களை கையாள்வதில் அனுபவமுடையவர்கள் முக்கிய பதவிகளில்  அமர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, இலங்கை விவகாரங்களை கையாள நியமிக்கப்படும் விசேட குழு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நேரடித் தொடர்புகளைக் கொண்டிருக்குமெனவும், அதற்கமைய அடுத்த வருட முற்பகுதியில் தமிழ்க் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை அமெரிக்காவுக்கு அழைத்து பேச்சுகளை நடத்துமென்றும் கூட்டமைப்பு வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

இதேசமயம், அமெரிக்க அரசின் புதிய மாற்றங்களுக்கு முகம்கொடுக்கும் வகையில் இலங்கை அரசும் இராஜதந்திர ரீதியில் காய்களை நகர்த்தி வருவதாக அறியமுடிகின்றது.

இதேவேளை, தமிழர் பிரச்சினைக்கான தீர்வில் அமெரிக்க அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்புகொண்டு அக்கறையாகச் செயற்பட இலங்கை அரசுதான் காரணம். அதற்காக இலங்கை அரசுக்கு நாம் நன்றி சொல்லவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்க் கூட்டமைப்புடன் அமெரிக்கா பேணிவரும் தொடர்பாடல்கள் மற்றும் சந்திப்புகள் குறித்து கருத்து வெளியிட்ட அவர், இது தொடர்பில் மேலும் கூறியதாவது:

"அமெரிக்க அரசு எங்களுடன் தொடர்பாடல்களை மிகவும் சிறந்த முறையில் பேணி வருகிறது. அண்மையில் இலங்கை வந்திருந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதிநிதி எங்களுடன் நடத்திய சந்திப்பு மிகவும் ஆக்கபூர்வமாக இருந்தது.

இப்படி எங்களுடன் அமெரிக்க அரசு தொடர்பாடல்களை பேண இலங்கை அரசுதான் காரணம். அதற்காக அவர்களுக்கு நாம் நன்றியைத்தான் சொல்லவேண்டும்.

தமிழர் பிரச்சினை தீர்வில் இந்த அரசு காட்டிவரும் கபடப்போக்கு, நேர்மையற்ற தன்மை என்பவற்றை அமெரிக்கா நன்கு புரிந்து கொண்டுள்ளது.

இன்னும் எதிர்காலத்தில் தமிழர் பிரச்சினைத் தீர்வில் அமெரிக்கா எமக்கு ஆதரவாக செயற்படும் என்று நாம் உறுதியாக நம்புகின்றோம். அரசின் ஏமாற்றுப்போக்கை இன்று உலக நாடுகள் உணர்ந்துள்ளன என கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்தார்.

ad

ad