புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 நவ., 2012




களமும் காதலும்(மாவீரர் 5ம் நாள்)
( அ.பகீரதன்)

அம்மி மிதிக்கும் வயதில்
விம்மி வெடித்தீர் 
கும்மி அடிக்கும் பருவத்தில்

குப்பி கடித்தீர்

கல்வி கற்கும் வயதில்
சொல்லி அடித்தீர்
செல்வி கலையும் பருவத்தில்
வேள்வி வளர்த்தீர்


முத்தங்கள் தொடுக்கும் வயதில்
யுத்தங்கள் தொடுத்தீர்
அர்த்தங்கள் புரியும் பருவத்தில்
அனர்த்தங்கள் தடுத்தீர்

பெண்ணைக் காதலிப்பதே
பேருவகை என அவன் நினைக்க
மண்ணைக் காதலிக்கும்
மகத்துவத்தை போதித்தீர்

இடுப்புவலி அடுப்புவழி தொடரும்பழி
அதுவே பெண்ணென அவன் நினைக்க
கரும்புலி கருணைமொழி காக்கும்விழி
அதுவே பெண்ணென நிரூபித்தீர்

அடிமைப்பூ அழுமூஞ்சி அருளிக்கொட்டை
அதுவே பெண்ணென அவன் நினைக்க
விடுதலைப்புலி உரிமைக்குரல் சயனற்வில்லை
அதுவே பெண்ணென சாதித்தீர்


வெள்ளியும் செவ்வாயும்
விரதமிருந்த பெண்டீர்-எமக்காய்
கொள்ளியும் கொலையும் எடுத்தீரே
எண்ணியும் வணங்கியும் உமைவாழ்த்துறோம்

ஈழத்து நிலமெல்லாம் நீ
பூவாய் மலரும்
தாயகத்து தாயிடத்தே நீ
சேயாய் வளரும்



அன்புடன், அ.பகீரதன்

www.pageerathan.blogspot.ca

ad

ad