புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஏப்., 2013


சென்னையில் மதிமுக உயர்நிலைக்கூட்டம்
மதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் உயர்நிலைக்கூட்டம் எழும்பூரில் உள்ள மதிமுக அலுவலகமான தாயகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா மற்றும் அனைத்து மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர். வரும் 18ம் தேதி முதல் 28ம் தேதி வரை பொள்ளாச்சியில் இருந்து ஈரோடு வரை மது ஒழிப்பு பிரசார நடைப்பயணம் நடத்த திட்டமிட்டுள்ளதாக வைகோ அறிவித்துள்ளார்.

புல்லருக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டதை அடுத்து முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூன்று பேரின் மரண தண்டனை குறித்தும், அதற்கான மேல் முறையீடு செய்வது குறித்தும் மதிமுக உயர்நிலைக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இலங்கைக்கு எதிரான மாணவர்களின் அடுத்த கட்ட போராட்டத்தில் மதிமுகவின் நிலைப்பாடு குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

ad

ad