புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 டிச., 2013

இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை:தயாராகிறது 
அமெரிக்கா! (சிறிலங்கா) இலங்கை அரசு தொடர்ந்தும் முரண்டுபிடிக்கும் வகையில் செயற்பட்டு வருவதால், அரசுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிப்பது தொடர்பான முனைப்புகளை அமெரிக்கா மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் அளவில் இலங்கைக்கு எதிரான இந்த பொருளாதார தடைகளை ஏற்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நாடுகள் இலங்கை மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன. இதனை விட இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசாரணைகளை நடத்தாது தன்னிச்சையாக செயற்பட்டு வருவது குறித்தே சர்வதேச சமூகம் தற்பொழுது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன. பொதுநலவாய நாடுகள் அமைப்பு போன்ற சர்வதேச அமைப்பின் தலைமை பதவியை பெற்றுக்கொண்ட பின்னரும் சர்வதேச நிலைப்பாடுகளுக்கு மதிப்பளித்து அதனை செயற்படுவதற்கு பதிலாக ஒருதலைப்பட்சமாக சர்வாதிகார ரீதியில் இலங்கை செயற்பட்டு வருவது அமெரிக்க ராஜதந்திரிகளை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. இது தொடர்பில் கடும் நடவடிக்கையாக அமெரிக்கா இலங்கைக்கு எதிராக பொருளாதார தடையை விதித்து இலங்கை ஆட்சியாளர் உணரும்படியான அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் என்ற யோசனையை காங்கிரஸ் சபையில் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமெரிக்க காங்கிரஸின் மனித உரிமை தொடர்பான உப குழுவே இந்த யோசனையை கொண்டு வரவுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் மாநாட்டிற்கு பின் இந்த யோசனை காங்கிரஸ் சபையில் முன்வைக்கப்பட உள்ளதாக ராஜதந்திர வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. அண்மைக் காலத்தில் உலகில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பான அதிகமான சாட்சியங்கள் இலங்கையில் இடம்பெற்ற போர் குறித்தே வெளியாகியுள்ளன. இவற்றில் உண்மை உள்ளதா இல்லையா என்பதை அறிய விசாரணைகளை நடத்தி கண்டறியும் பொறுப்பு இலங்கை அரசாங்கத்திற்கு உள்ளது. விசாரணைகளை நடத்தாது தொடர்ந்தும் அதனை புறக்கணித்து வருவது ராஜதந்திரமான செயல் அல்ல எனவும் அமெரிக்க காங்கிரஸின் மனித உரிமை தொடர்பான உபகுழு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் உத்தேச பொருளாதார தடைவிதிப்பில் இலங்கை மக்களுக்கு தேவையான உணவு, மருந்து போன்றவற்றை தவிர வேறு விடயங்கள் உள்ளடக்கப்படலாம் என கருதப்படுகிறது. குறிப்பாக இலங்கையில் இருக்கும் வெளிநாட்டு வங்கி கணக்குகளை தடைசெய்தல், வெளிநாட்டவர் இலங்கை செல்லவும், இலங்கையர் வெளிநாடுகளுக்கு செல்லவும் வீசா வழங்குவதை இடைநிறுத்துதல் அல்லது கட்டுப்பாடுகளை விதித்தல், எரிப்பெருள் இறக்குமதி கட்டுப்பாடு, இலங்கையின் ஏற்றுமதிகளை கட்டுப்படுத்துதல் போன்றவை இந்த பொருளாதார தடையில் உள்ளடக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் டுபாயில் இடம்பெற்ற பரபரப்பான இரண்டாவது இருபது-20 போட்டியில், இலங்கை அணி அபார வெற்றி பெற்றதோடு தொடர் 1-1 என சமநிலையானது.
 
ஐக்­கிய அரபு இராச்­சி­யத்­துக்கு கிரிக்கெட் சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்­டுள்ள இலங்கை அணியும் பாகிஸ்தான் அணியும் 2 இரு­பது-20, 5 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்­டிகள் கொண்ட தொடரில் மோதுகின்றன.
 
டுபாயில் இடம்பெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றது. இந்நிலையில் இன்று இடம்பெற்ற தீர்க்கமான இரண்டாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
 
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள தீர்மானித்தது.
 
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை

விஜய்-மோகன்லால் உயிர் தப்பினார்கள்

ஜில்லா’ படத்துக்காக கோவில் திருவிழா காட்சியை படமாக்கியபோது, திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. அதில் விஜய், மோகன்லால் இருவரும் உயிர் தப்பினார்கள். 5 பேர் காயம் அடைந்தார்கள்.
விஜய்-மோகன்லால் இணைந்து நடிக்க, சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கும் ‘ஜில்லா’ படத்தின் படப்பிடிப்பு உடுமலைப்பேட்டை அருகில் உள்ள திருமூர்த்தி அணைக்கட்டில் நடந்தது. அங்கு கோவில் திருவிழா காட்சிக்காக கோவில், தேர்,

பரீட்சை மண்டபத்திற்குள் முதலை

க.பொ.த சாதாரணதர பரீட்சை இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள தர்மபுரம் மகாவித்தியாலய மண்டபத்திற்குள் சுமார் ஐந்து அடி நீளமான முதலை ஒன்று உட்புகுந்தமையினால் மாணவர்க

நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி யாழில் ஆர்ப்பாட்டம்

யாழ். போதனா வைத்­தி­ய­சா­லையில் கட­மை­யாற்­று­கின்ற சுகா­தாரத் தொண்­டர்கள் நிரந்­தர நிய­ம­னத்தை வழங்­கு­மாறு கோரி நேற்று கொட்டும் மழையில் ஆர்ப்­பாட்­ட த்தில் ஈடுபட்டதுடன் மனித உரிமை ஆணை­யா­ள­ருக்கும்


சோனியா, ராஜ்நாத் சிங்குக்கு அரவிந்த் கெஜ்ரிவால் எழுப்பியுள்ள 18 நிபந்தனை விபரம்!
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைப்பதற்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இந்த ஆதரவை ஏற்பது பற்றி முடிவு செய்வதற்கு முன்பாக, தனது பிரச்சாரத்தின்போது முன்வைத்த வாக்குறுதிகள்

மத்தியில் நிலையான ஆட்சி அமைவது சந்தேகம்: ப.சிதம்பரம் கருத்து

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கு பிறகு நிலையான ஆட்சி அமையும் என்பதை உறுதியாக கூறமுடியாது என்று மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 
குண்டு வைக்கப்போவது தெரிந்தால் கர்ப்பிணி மனைவியை அனுப்பி வைத்திருப்பேனா? குற்றம்சுமத்தப்பட்ட முருகனின் கருத்துக்கள்-விகடன் 

''ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் வாக்குமூலத்தை அப்படியே பதிவு செய்யவில்லை. திருத்தம் செய்தோம்'' என்று வழக்கு விசாரணை அதிகாரி தியாகராஜன் சொன்ன நிலையில்... 
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன்,
பிரதமர் பதவியில் இருந்து ஜயரத்ன நீக்கம் - புதிய பிரதமராக ஜீ.எல்.பீரிஸ் நியமனம்
பிரதமர் டி.எம். ஜயரத்னவை அந்த பதவியில் இருந்து நீக்கி விட்டு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை பிரதமராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ள அரச வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ad

ad