புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜன., 2014

மேல், தென் மாகாண சபைகளுக்கான வேட்புமனுக்கள் ஏற்கும் திகதி அறிவிப்பு
மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான வேட்பு மனுக்கள் இந்த மாதம் 30 திகதி முதல் ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகள் எதிர்வரும் பெப்ரவரி ஆறாம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடைவுள்ளன.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படவுள்ளதாக, தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 30ம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 6ம் திகதி வரையில் குறித்த இரண்டு மாகாணசபைத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகளும், சுயாதீனக் குழுக்களும் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும் என தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது.
வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படவுள்ளது.
மேல் மற்றும் தென் மாகாண சபைகளின் கடந்த 12ம் திகதி கலைக்கப்படடிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad