புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜன., 2014

ராஜ்யசபா தேர்தலில் திமுக போட்டியிடுமா? :கலைஞர் பேட்டி
திமுக தலைவர் கலைஞரை இன்று செய்தியாளர்கள் சந்தித்தனர்.
கேள்வி :- தமிழ்நாட்டில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான 6 பேர்களின் பதவி காலம் முடிவடை வதால், பிப்ரவரி 7ஆம்
தேதி தேர்தல் வருகிறது. தி.மு.க. உறுப்பினர்கள் இரண்டு பேர்களின் பதவிக் காலமும் முடிவடைகிறது. அந்தத் தேர்தலில் தி.மு.க. போட்டியிடுமா?


கலைஞர் :- அதைப் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை.

கேள்வி :- தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி பற்றிய பேச்சு வார்த்தை நடந்திருக்கிறதா? பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இருக்கிறதா?
கலைஞர் :- பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை, அதனால் முன்னேற்றம் என்ற கேள்விக்கு இடமில்லை.

கேள்வி :- சென்னையில் ரயிலில் பயணம் செய்த ஒரு வெளிநாட்டுப் பெண்மணியிடமே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதே; தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு எப்படியுள்ளது?
கலைஞர் :- தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு என்று ஒன்று இருக்கிறதா? இருந்தால் அல்லவா அதைப் பற்றி பேச முடியும்.

கேள்வி :- திருச்சி மாநில மாநாட்டு ஏற்பாடுகள் எந்த அளவுக்கு  தீவிரமாக நடைபெறுகிறது?


கலைஞர் :- மிகச் சிறப்பான அளவுக்கு நடைபெறுகிறது.

ad

ad