புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 பிப்., 2014

டுபாயிலிருந்து சுவீடன் - ஸ்டோக்ஹோம் நோக்கி சென்ற விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டிய இலங்கை பயணி கைது
டுபாயிலிருந்து சுவீடன் - ஸ்டோக்ஹோம் நோக்கி சென்ற விமானத்தில் பயணித்த இலங்கையர் ஒருவர், தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாக கூறி அச்சுறுத்தியதால் கைது செய்யப்பட்டுள்ளார்.எமிரேட்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் பயணித்த இந்த இலங்கையர், தன்னிடம் வெடிக் குண்டு இருப்பதாக தெரிவித்துள்ளதுடன் விமானிகளில் அறைக்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளார்.
அப்போது விமானத்தில் இருந்த சிப்பந்திகள் அவரை தடுத்து பிடித்துள்ளனர். இதனையடுத்து விமான சுவீடனின் அலண்டா விமானத்தில் தரையிறக்கப்பட்டது.
விமானப் பயணத்தை சீர்குலைத்தார் என்ற குற்றச்சாட்டில் சுவீடன் அதிகாரிகள் சந்தேக நபரரை கைது செய்துள்ளனர்.
சுவீடன் அதிகாரிகள் அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ad

ad