புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 நவ., 2014

28 தேர்தல்களில் வென்ற நான் 29வது தேர்தலிலும் வெல்வேன்! மகிந்த ராஜபக்ச - சரத் பொன்சேகாவையும் மறந்து விட முடியாது
28 தேர்தல்களில் வெற்றி பெற்ற இன்றைய அரசாங்கம் 29 வது தேர்தலிலும் வெற்றி பெறும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பொரளை கம்பல் மைதானத்தில் இன்று நடைபெற்ற திவிநெகும திட்டத்தின் முதலாவது தேசிய மாநாட்டில பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் நாட்டு மக்களை நம்புகிறேன். நாட்டை நேசிக்கும் மக்கள் இருக்கும் வரை தற்போதைய அரசாங்கத்தின் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை மறுபுறம் திருப்ப எவருக்கும் முடியாது.
ஏழைகள் ஏழைகளாக இருக்க வேண்டும் என்பது எமது தேவையல்ல. மக்களின் தேவைகளுக்கு அமைய இவை கட்டியெழுப்படுகின்றன.
மக்களின் விருப்பு வெறுப்புகளை புறந்தள்ளி விட்ட கிராமத்தை கட்டியெழுப்ப முடியாது. மக்களை கட்டியெழுப்ப முடியாது.
மக்கள் கோரிய அனைத்தையும் இன்றைய அரசாங்கம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தது. மக்களின் உரிமைகளை இல்லாமல் செய்யாது அரசாங்கத்தின் பொறுப்பு நிறைவேற்றப்பட்டு வருகிறது எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

ad

ad