புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 நவ., 2014

யாழ். பல்கலை கலைப்பிரிவு மாணவனை படைப் புலனாய்வாளர்கள் கைது செய்ய முயற்சி
யாழ். பல்கலைக்கழக 3ம் வருட கலைப்பிரிவின் ஊடக கற்கை பிரிவு மாணவன் ஒருவருடைய வீட்டை சுற்றிவளைத்த புலனாய்வாளர்கள் குறித்த
மாணவனை கைதுசெய்ய முற்பட்ட சம்பவம் ஒன்று இன்றைய தினம் இடம்பெற்றள்ளது.
யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினம் தொடர்பான சுவர் ஒட்டிகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒட்டப்பட்டிருந்த நிலையிலேயே இன்று மேற்படி சம்பவம்  இடம்பெற்றள்ளது.
மேற்படி பிரிவில் கல்விகற்கும் க.நிவாஸ் என்ற மாணவனின் நீர்வேலி வீட்டிற்கு இன்று மாலை 8 மணியளவில் சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் குறித்த மாணவன் தொடர்பாக விசாரணை நடத்தியதுடன் அவனை கைதுசெய்ய முற்பட்டுள்ளனர்.
எனினும் அவன் வீட்டை விட்டு தப்பியோடிய நிலையில் வீட்டிலிருந்த பெற்றோரை மர்மநபர்கள் அச்சுறுத்திவிட்டுச் சென்றுள்ளனர்.

ad

ad