புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஏப்., 2015

கொழும்பு அரசியலில் கடும் நெருக்கடி நிலை


சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் எழுந்துள்ள நெருக்கடியாலும், 19 ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நாளை சமர்ப்பிக்கப்படவுள்ளதாலும், இந்தோனேசியாவுக்கு மேற்கொள்ள இருந்த பயணத்திட்டத்தை ஜனாதிபதி மைத்திரி கைவிட்டுள்ளதாகத் தெரிவிக் கப்படுகின்றது.
 
60 ஆவது ஆசிய - ஆபிரிக்க உச்சி மாநாடு இந்தோனேசியத் தலை நகர் ஜகர்த்தாவில், இன்று தொடக்கம் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
 
இந்த மாநாட்டில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பங்கேற்பார் என்று இந்தானேசிய அரசு அறிவித் திருந்தது. ஆனால், இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சு நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள தகவலின் படி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என்று தெரியவந்துள்ளது.
 
இன்று ஆரம்பமாகவுள்ள இந்த மாநாட்டில், ஆசிய - ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த 27 நாடுகளின் தலைவர்கள், 9 நாடுகளின் துணை ஜனாதிபதிகள், 3 நாடுகளின் பிரதிப் பிரதமர்கள் பங்கேற்கவுள்ளனர். 
 
ஏனைய நாடுகளின் சார்பில், அமைச்சர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். அமைச்சர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகளின் பட்டியலிலேயே இலங்கை இடம்பெற்றுள்ளது.
 
தற்போதைய அரசின் 100 நாள் செயற்திட்டம் முடிவுக்கட்டத்தை நெருங்கியுள்ளது. 19 ஆவது அரசமைப்புத் திருத்தம் நாடாளுமன்றத் தில் நாளை விவாதிக்கப்படவுள்ளது.
 
அத்துடன், தற்போதைய அரசு நாடாளுமன்றத்தைக் கலைப் பதாக வாக்குறுதியளித்த ஏப்ரல் 23 ஆம் திகதியும் நெருங்கியுள்ளது.
 
இந்த நிலையில், ஜனாதிபதி தலைமை தாங்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் கடுமையான இழுபறி நிலையும் தோன்றியிருக்கிறது. உள்நாட்டில் ஜனாதிபதி எதிர்கொள்ளும் பலமுனை அழுத்தங்களினால் தான், ஆசிய - ஆபிரிக்க நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாட்டில் அவர் பங்கேற்பதை தவிர்த்துக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

ad

ad