புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஏப்., 2015

வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட சொத்துக்கள் குறித்து ஆராய உலக வங்கி அதிகாரிகள் இலங்கை வருகை


கொள்ளையிடப்பட்ட பணம் மற்றும் சொத்துக்களை மீள பெற்றுக்கொள்வது தொடர்பில் அதிகாரிகளுடனும், பொலிஸாருடனும் கலந்துரையாடுவதற்காக உலக வங்கியின் அதிகாரிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
கொள்ளையிடப்பட்ட சொத்துக்களை மீள பெறுவதற்காக உலக வங்கி ஒரு பிரிவை ஏற்படுத்தியுள்ளது, அதன் அதிகாரிகளே இவ்வாறு இலங்கை வந்துள்ளனர்.
வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் தலைவர்களுக்கு சொந்தமான சொத்துக்கள் குறித்து தற்போதைய அரசிற்கு ஆலோசனை வழங்கவே இந்த குழுவினர் இலங்கை வந்துள்ளனர்.
இது சம்பந்தமாக விசாரணைகளை நடத்தி வரும் அதிகாரிகள், தாம் இதுவரை மேற்கொண்ட விசாரணைகள் தொடர்பாக உலக வங்கியின் அதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்தி, இலங்கைக்கு தேவையான உதவிகளை பெற்றுக்கொள்ள உள்ளதாக தெரியவருகிறது

ad

ad