இத்தாலி அருகே மத்திய தரைக்கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் 600 பேர் பலியாகியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
விபத்துக்குள்ளான படகில் பயணம் செய்த 28 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
படகில் பயணம் செய்த எஞ்சியவர்களை தேடும் பணியில் இத்தாலிய கடற்படை ஈடுபட்டுள்ளது.
லிபியாவிலிருந்து இத்தாலி நோக்கி சென்ற போது லேம்பிடூசா என்றும் தீவு அருகே விபத்து ஏற்பட்டுள்ளது.
20 கப்பல்கள் 3 ஹெலிகாப்டர்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
வடக்கு லிபியாவில் சில நாட்களுக்கு முன்னதாக, இடம்பெற்ற படகு விபத்தில் 400 பேர் பலியானதாக தெரிவிக்கப்படுகின்றது.