புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 மே, 2015

புங்குடுதீவு மாணவி கொலை ..சந்தேக நபர்கள் மூன்று சகோதரர் மற்றும் ஒரு நண்பர் சிக்கினர்


புங்குடுதீவு பகுதியில் 18 வயது பாடசாலை மாணவி வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புங்குடுதீவு வல்லனை பகுதியைச் சேர்ந்த ரவி, செந்தில் சின்னாம்பி ஆகிய சகோதரர்களும் நண்பரான கிருபாவும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட இவர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, ரவி என்ற சந்தேகநபர் முதலில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரால் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் செந்தில் என்பவர் கைது செய்யப்பட்டார். அதன்பின் மற்றைய சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ், புங்குடுதீவு பகுதியில் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா பாடசாலை செல்லும் வழியில் கடத்தப்பட்டு பாழடைந்த காட்டுப் பகுதியில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பின் கொலை செய்யப்பட்டுள்ளார். 
யுவதியின் சடலம் நேற்று காலை மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

ad

ad