புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 மே, 2015

போர் வெற்றி தின பெயர் மாற்றம் வரவேற்கத்தக்கது!- இரா சம்பந்தன் [ பி.பி.சி ]


இலங்கை அரசு விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த மே 18ம் தேதியை, யுத்த வெற்றி தினமாகக் கொண்டாடி வந்ததை நிறுத்தி, புதிய அரசு, அதை நாட்டைப் பிரிவினைவாதத்திலிருந்து காத்த தினமாக அனுசரிப்பது என்று முடிவெடுத்திருப்பதைப் பற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அரசின் இந்த அறிவிப்பு சிறப்பானது என தெரிவித்துள்ளார்.
போர் முடிவுக்கு வந்த மே 18ம் தேதியை, யுத்த வெற்றி தினமாக கொண்டாடாமல், நாட்டைப் பிரிவினைவாதத்திலிருந்து காத்த தினமாக அனுசரிப்பது என்று அறிவித்திருப்பதைப் பற்றி தமிழர்கள் தரப்பில் இருவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன.
தமிழர்களை நாடாளுமன்றத்தில் பெரிதும் பிரதிநிதித்துவப்படுத்தும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அரசின் இந்த அறிவிப்பை சாதகமானதாகப் பார்க்கிறார்.
ஆனால் போரில் இறந்தவர்கள் காணாமல் போனவர்கள், சிறையில் இருப்பவர்கள் என்று போர் தொடர்பான பலதரப்பட்ட பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படாமல் இருக்கும் நிலையில் இது போன்ற குறியீட்டளவிலான அறிவிப்புகள் போதாது என்றும் அவர் தெரிவித்தார். 
பிரதான தமிழ் கட்சியின் நிலை இவ்வாறு இருக்கும் நிலையில், தமிழ் சிவில் அமைப்புகள் இது குறித்து சற்று மாறுபடுகின்றன.
இங்கே பிரிட்டனில் உள்ள ஊடகவியலாளர் நடராஜா குருபரன், இந்த அறிவிப்பு அரசியல் காரணங்களால் வந்திருக்கிறது என்கிறார்.
ஆனாலும் குறியீட்டளவில் இது வரவேற்கத்தக்கதுதான் என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார்

ad

ad