புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூலை, 2015

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் 621 வாக்களிப்பு நிலையங்கள்; வேதநாயகன்


நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ். மாவட்டத்தில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள 5 இலட்சத்து 29ஆயிரத்து 239பேருக்காக 621 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார். 
 
அவர் மேலும்  தெரிவிக்கையில், 
 
நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆரம்ப கட்ட வேலைகள் அனைத்தும்  பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. 
 
வாக்கெடுப்பு நிலையங்கள் , வாக்கெண்ணும்  நிலையங்களுக்கான பாதுகாப்பு முன்னெற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
 
யாழ். மாவட்டத்தில் மாத்திரம் 4 இலட்சத்து 50 ஆயிரத்து 146 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.அதேபோல கிளிநொச்சி மாவட்டம்  உள்ளடங்கலாக   5 இலட்சத்து 29ஆயிரத்து 239 பேர் இம்முறை வாக்களிக்கவுள்ளனர்.
 
அத்துடன் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு வாக்களிப்பதற்காக வழமைபோன்று அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் மேலும்  தெரிவித்துள்ளார்

ad

ad