புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஆக., 2015

துளசி மருத்துவம் குறித்து செய்தியை வெளியிட்ட டி.வி.க்கு ரூ.25 லட்சம் அபராதம்!

துளசியின் மருத்துவம் குறித்து உறுதிப்படுத்தப்படாத தகவலை ஒளிபரப்பியதாகக் கூறி, ஆசிய தொலைக்காட்சி நிறுவனத்துக்கு இங்கிலாந்து
அரசு 25 ஆயிரம் பவுண்டுகள் (24 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய்) அபராதம் விதித்துள்ளது.

இங்கிலாந்தில் இயங்கி வரும் ஆசி தொலைக்காட்சி கடந்த ஆண்டு ஜூன் மாதம் மருத்துவ குறிப்பு தொடர்பான நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்பியது. அதில், பேசிய மருத்துவர் பங்கஜ் நாராம், ''11 துளசி இலைகளும், மூன்று கருப்பு மிளகுகளும் புற்றுநோய் வருவதை தவிர்க்கும். இந்த மருந்தை நானே விற்பனை செய்து வருகிறேன்.
இந்த மருந்து புற்று நோயை உருவாக்கும் உயிரணுக்களை கொல்லும். புற்று நோய் மட்டுமல்லாமல் குடல் இறக்க நோயையும் இது குணப்படுத்தும்.

இதுமட்டுமல்லாமல், 75,000 புற்றுநோயாளிகள் என்னிடம் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் உள்ள மருத்துவமனைகள் கைவிடப்பட்ட சில நோயாளிகளையும் நான் குணப்படுத்தி இருக்கிறேன்'' என்றார்.

இந்த நிகழ்ச்சிக்கு குறித்து புகார் எழுந்தது. இதை விசாரித்த பிரிட்டன் ஒளிபரப்பு துறை கண்காணிப்பு அமைப்பான ஆப்காம், ''இது ஆதாரமற்ற, நிரூபிக்கப்படாத ஒரு மருத்துவ ஆலோசனை. இந்த தகவலை நம்பி, இதுவரை எடுத்து வந்த மருத்துவ சிகிச்சையை பலர் ஒத்திப்போடவோ, நிறுத்தியிருக்கவோ கூடும்.

நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் விதமாக இந்த தகவல் இருக்கிறது. இந்த நிகழ்ச்சி ஒளிபரப்புத் துறை விதிகளை இந்த நிகழ்ச்சி மீறியுள்ளது'' எனக் கூறி, அந்த தொலைக்காட்சி நிறுவனத்திற்கு 25,000 பவுண்டுகள் அபராதம் விதித்துள்ளது

ad

ad