புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஆக., 2015

ஜெயலலிதா ஆணவத்தின் உச்சத்தில் உள்ளார்: வைகோ பரபரப்பு பேட்டி




மிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா ஆணவத்தின் உச்சத்தில் உள்ளார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சொந்த ஊர் கலிங்கப்பட்டி. இங்குள்ள டாஸ்டாக் கடையை அகற்றக்கோரி சனிக்கிழமை வைகோ தயார் மாரியம்மாள், தம்பி ரவிச்சந்திரன் உள்பட சுமார் 800 பேர் உண்ணாவிரதம் மேற்கொண்டார். இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கலிக்கப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திறக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் கலிங்கப்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, 

முதல் அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் போலீஸ் பாதுகாப்புடன் கலிங்கப்பட்டியில் டாஸ்டாக் கடை திறக்கப்பட்டுள்ளது. நேற்று மூடக்கோரி போராட்டம் நடந்த நிலையில் இன்று திறக்கப்பட்டுள்ளது. தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா ஆணவத்தின் உச்சத்தில் உள்ளார். கலிங்கப்பட்டியில் டாஸ்டாக் கடை மீண்டும திறக்கப்பட்டதை கண்டித்து எனது தலைமையில் இன்று ஆயிரம் பேர் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர் என்றார்.

மேலும், மதுவிலக்கு கோரி உயிர்விட்ட சசிபெருமாள் மகன், மகள் கைது செய்யப்பட்டது கண்டனத்திற்குரியது. முழு மதுவிலக்கை தமிழகத்தில் ஏற்படுத்த ஆகஸ்ட் 4ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடக்க உள்ளது. அதில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுததார்

ad

ad