புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 மார்., 2016

தேர்தல் தேதி அறிவித்த பிறகே கூட்டணி குறித்த முடிவை அறிவிப்பார் விஜயகாந்த்!
திமுக, தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துவிட்டதாகவும், தேமுதிகவுக்கு 59 சீட் தருவதற்கு திமுக ஒத்துக் கொண்டதாகவும் பேஸ்புக், வாட்ஸ் அப்பில் இரண்டு நாளாக தகவல்கள் பரவி வந்தன. 

இதுதொடர்பாக அக்கட்சிகளின் வட்டாரங்களில் விசாரித்தபோது, இரு கட்சிகளுக்கிடையேயான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. தேர்தலுக்கு இன்னும் நாள் இருக்கிறது. தேர்தல் தேதியும் அறிவிக்கப்படவில்லை. தேர்தல் தேதி அறிவித்த பிறகே விஜயகாந்த் கூட்டணி குறித்த முடிவை அறிவிப்பார் என தெரிவித்தனர். 

மேலும், மார்ச் 7 வரை நடக்க உள்ள திமுக நேர்காணல் முடிந்தால்தான் திமுக மேலிடமும் தங்களுக்குள்ள வெற்றி வாய்ப்பு தொகுதிகள் குறித்து ஒரு முடிவுக்கு வரும் என தெரிவித்தனர். தேமுதிக நேர்காணல் செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

ad

ad