புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 மார்., 2019

எழுவர் விடுதலையில் தனிப்பட்ட கோபம் இல்லை; முடிவு நீதிமன்றத்தின் கையில் - ராகுல் காந்தி!


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை, அகில
இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று தொடங்கி வைக்கிறார்.

இதற்காக சென்னை வந்த அவர், ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி மாணவிகளிடம் உரையாடினார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர், பாஜக ஆட்சியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வேலையின்மை அதிகரித்துள்ளது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதன் மூலம் வேலைவாய்ப்பை அதிகரிக்க முயற்சி மேற்கொள்வோம். சிறு, குறு தொழில்துறையை முன்னேற்றுவதன் மூலம் வேலைவாய்ப்பை பெருக்கலாம்.

இதுதொடர்பான திட்டங்கள் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும். இளைஞர்கள் வேலையின்றி இருப்பது, இந்த தேர்தலில் முக்கிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. பிரதமர் வேட்பாளர் யார் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.புல்வாமா தற்கொலைப்படை தாக்குதல் நடக்காமல் தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்று கேள்வி எழுப்பினார். ஜி.எஸ்.டியால் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் விவசாயிகள் ஏராளமான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். ஆனால் அரசு எந்தவித தீர்வையும் அளிக்கவில்லை. எழுவர் விடுதலையில் எனக்கு தனிப்பட்ட கோபம் இல்லை. அவர்களின் விடுதலை குறித்து நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும்.

தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் கூட்டணி முடிவாகி விட்டன. பீகாரில் கூட்டணி பேச்சுவார்த்தை, பாதி நிறைவு பெற்றுவிட்டது. ஜம்மு காஷ்மீரில் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது என்று கூறினார்.

ad

ad