புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 மார்., 2019

தற்போதைய செய்தி -கூட்டமைப்பின் ராஜதந்திர வெற்றி – கேப்பாப்பிலவு காணிகளுக்கு விடிவு


முல்லைத்தீவு மாவட்டம், கேப்பாப்பிலவு மக்களின் காணிகளை உடன் விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திபால சிறிசேன இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்கவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம். ஏ.சுமந்திரன் ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

அதில் கேப்பாப்பிலவு மக்கள் நீண்ட காலமாக நடத்தி வரும் போராட்டம் குறித்து அரசு பாராமுகமாக உள்ளது எனக் கூட்டமைப்புக் குழுவினர் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தனர்.

இதனையடுத்து, கூட்டமைப்பினர் முன்னிலையில் இராணுவத் தளபதியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜனாதிபதி, உடனடியாக கேப்பாப்பிலவு மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

ad

ad