புல்லுருவிகளுக்கும் துரோகிகளுக்கும் இடமளிக்கும் கூடாரமாக தி.மு.க. மாறிவிட்டது. பரிதி இளம்வழுதி
கடந்த 28-ம் தேதி அ.தி.மு.க-வில் ஐக்கியமாகிவிட்டார் பரிதி இளம்வழுதி! தி.மு.க. சார்பில் ஆறு முறை எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு துணை சபாநாயகராகவும் செய்தித் துறை அமைச்சராகவும் பொறுப்புவகித்து, தி.மு.க-வின் அசைக்க முடியாத தூண்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் பரிதி இளம்வழுதி. 1991-96 காலகட்டத்தில் தி.மு.க. சார்பில் சட்டசபைக்குச் சென்ற ஒரே உறுப்பினர், பரிதிதான். அந்த நேரத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்களால் தினந்தோறும் தாக்கப்பட்டு, சபையில் இருந்து தூக்கி வீசப்படுவார் பரிதி. இன்று, தன்னுடைய மனவலிக்கு மருந்து தேடி, அதே அ.தி.மு.க-வில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்.