புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூலை, 2013

.

விடுதலைப்போராட்டம் முடிந்து விட்டது என்று கேணல் ராம் கூறியதாக இணையங்களில் செய்தி கிடக்கிறது. இதே ராம்தான் மே 18 இற்கு பிறகு காடுகளுக்குள் இருந்து பயிற்சி எடுக்கிறோம், விரைவில் போராடுவோம் என்றும் கூறினார். 
அவர் அற்புதமான ஒரு போராளி. கேபியின் துரோகத்தால் வீழ்த்தப்பட்டு இன்று சிங்கள சித்திரவதை முகாமிலிருந்து சிங்களத்தின் தேவைக்கேற்ப பேச வேண்டிய சூழல்..
அவரை நாம் விடுவோம். அவர் இப்பதானே வெளியே வந்திருக்கிறார். பின்பு இது குறித்து எல்லாம் ஆறுதலாக பார்ப்போம்.

ஆனால் அவர் சொல்லும் கூற்றை மட்டும் இப்போது அலசுவோம். இலக்கை அடையாமல் எந்த மக்கள் போராட்டமும் முடிவுக்கு வராது. மே 18 இற்கு பிறகு தமிழ் மக்களுக்கு நாடு தேவையில்லை. அவர்களை அவர்கள் நிலத்தில் விட்டாலே காணும். எல்லாவற்றையும் நிறுத்தி விடலாம். ஆனால் என்ன நடந்தது? என்ன நடக்குது? 

அவர் சொல்ல வருவது ஆயுதப்பேராட்டத்தை இனி முன்னெடுக்க முடியாது என்ற ஒரு அர்த்தத்தில்தான். ஆனால் அதில் பாதிதான் உண்மை. அதாவது இனி சிங்களத்தை நாம் முன்பு போன்று ஒரு மரபுவழி இராணுவமாக எதிர்கொள்ள முடியாது என்பதே உண்மை. 

ஆயுத போராட்டத்திலுள்ள பாவ புண்ணியங்களை தள்ளிவைத்துவிட்டு புலிகளின் பின்னடவை உலக இராணுவ வல்லுனர்கள் அலசியிருக்கிறார்கள். அவர்கள் புலிகள் விட்ட தவறாக குறிப்பிடுவது, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அரசியல் தவறையும் அடுத்து மரபுவழி இராணுவமாக உருவாகியதையும்.. அதாவது தொழில் நுட்ப ரீதியில் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குமேல் வளர்ச்சியடையாமல் ஒரு அங்கீகரிக்கப்படாத இராணுவம் மரபுவழியாக தொடாந்து இயங்க முடியாது என்பது அவர்கள் வாதம்.

அதாவது அரசுக்கு ஒரு அங்கீகாரத்துடன் தொடர்ச்சியான ஒரு ஆயுத தளபாட வழங்கல் - நவீன தொழில் நுட்ப வழங்கல்கள் ( பல்குழல் எறிகணைகள், கிபிர்யுத்த விமானங்கள் குறிப்பாக செய்மதி உதவி) இருக்கும். சட்ட விரோதமாக இயங்கும் ஒரு அமைப்புக்கு அது சாத்தியமில்லை. மனித வளத்தை மட்டும் நம்பி போராட முடியாது. 

ஆனாலும் புலிகள் அதையும் மீறி போராடியதை ஒரு நம்ப முடியாத அதிசயமாகவே பதிவு செய்கிறார்கள். அவர்கள் குறிப்பிடும் முக்கியமான பகுதி இதுதான். புரிந்துணர்வு ஒப்பந்தம் முறிந்தவுடன் புலிகள் கெரில்லா போராட்ட முறைகளை வகுத்து அணிகளை பரப்பியிருக்க வேண்டும் என்பது அவர்கள் வாதம். உலகின் தலைசிறந்த கெரில்லா இரணுவம் என்பதுடன் தற்கொலைத்தாக்குதல்களின் அதியுச்ச பயனை சாத்தியப்படுத்திய ஒரு அமைப்பு என்ற அடிப்படையில் அவர்கள் இதை முன்வைக்கிறார்கள்.

இனி நாம் விடயத்திற்கு வருவோம். தற்போது கேணல் ராம் மட்டுமல்ல பலர் சொல்லும் மரபுவழி இராணுவ கட்டமைப்பையே நாம் இழந்திருக்கிறோம். ஏனென்றால் எமக்கு ஆளணியும் இல்லை தொழில்நுட்ப வழங்கலும் இல்லை. 

ஆனால் உலகின் தலைசிறந்த கெரில்லா போராட்ட அமைப்பு என்பதுடன் பயிற்சி -துணிவு -தந்திரம் மிக்க தற்கெலைப்படையணி என்ற கட்டமைப்பை நாம் இன்னும் இழக்கவில்லை. அது செயற்பாட்டில் இல்லையே ஒழிய உறங்கு நிலையில் அப்படியே இருக்கிறது. அல்லது அதை எம்மால் வளர்க்க முடியும். கற்றுக் கொண்ட பாடங்களிலிருந்து புலிகள் சாத்தியமான பலவற்றை அலசிக்கொண்டிருக்கிறார்கள்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாதிடப்படவேண்டிய இக்கட்டுக்குள் தள்ளியதும் படைவலுச்சமநிலையை புலிகள் பக்கம் திருப்பியதுமான ஒரு தாக்குதல்தான் கட்டுநாயக்கா விமான நிலைய தாக்குதல். வெறும் 14 போராளிகள் அதை சாதித்து காட்டினார்கள:;..

உண்மையில் ஆயுத போராட்டத்திற்கான தேவை தற்போது இல்லை. தேவைப்பட்டால் சில நூறு போராளிகளுடன் 48 - 72 மணிநேர இடைவெளிகளில் சிறீலங்காவின் இராணுவ பொருண்மிய கேந்திர நிலைகளை தாக்கி அழித்து முடக்க செய்யலாம். அதற்கு தேவை பல்லாயிரக்கணக்கான போராளிகள் அல்ல. கட்டுநாயக்காவிற்குள் அநுரதபுரத்திற்குள் புகுந்த போராளிகளை போன்ற 100 போராளிகள்தான்.

எவ்வளவு பொருத்தம் இதை எழுதும் இந்த தருணத்தில் வரலாற்றை படைத்து சாதித்து காட்டிய கரும்புலிகள் நினைவு நாளில் நாம் இருக்கிறோம்.

சாதித்த வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள் நாம். திருப்பி சாதிப்பது எமக்கு ஒன்றும் கடினம் அல்ல.

எனவே யாருக்காகவும் எதற்காகவும் விடுதலைப்போராட்டம் நிற்காது. அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். அற வழியிலோ தேவைப்பட்டால் ஆயுத வழியிலோ..

ad

ad