புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 டிச., 2012


``போட்டியில் மீண்டும் விளையாடுவதை நினைத்து பதட்டமாக உள்ளது,'' என, ஸ்பெயின் டென்னிஸ் வீரர் நடால் தெரிவித்தார்.
டென்னிஸ் அரங்கில் "நம்பர்-4' இடத்தில் <<உள்ளவர் ஸ்பெயினின் நடால், 26. இதுவரை 11 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற இவரின், இடது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, விம்பிள்டன், யு.எஸ்., ஓபன், லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவில்லை.

ஏழு மாத இடைவெளிக்குப் பின், காயத்தில் இருந்து மீண்ட இவர், டிச.27ம் தேதி துவங்கவுள்ள, அபுதாபி ஓபன் டென்னிசில் கலந்து கொள்கிறார். 

நடால் கூறுகையில்,""நீண்ட இடைவெளிக்குப் பின் போட்டியில் பங்கேற்பதால், எப்படி செயல்படுவது என்பதை நினைத்து பயமாக உள்ளது. இருப்பினும், டாக்டர்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. எல்லாம் நன்றாக நடக்கும் என நம்புகிறேன்,'' என்றார்.
nk

ad

ad