புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 டிச., 2012

மின்னஞ்சலில் கல்லூரி மாணவிக்கு ஆபாச படங்கள் அனுப்பி தொந்தரவு செய்தவரை காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர். 
தஞ்சாவூரைச் சேர்ந்த மாணவி, தனது வேலை விசயமாக சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்துக்கு தனது பயோடேட்டாவை அனுப்பியிருந்தார். அந்த நிறுவனத்தின் உரிமையாளர் தினகர் பிரசாத்(வயது 37) என்பவர்., அந்த மாணவியின் பயோடேட்டா மூலம்
மற்றொரு மின்னஞ்சல் முகவரி தொடங்கி , ஏற்கனவே தஞ்சை மாணவியிடம் பெற்ற அவரின் தோழிகளின் மின்னஞ்சல் முகவரி மூலம், தஞ்சை மாணவியின் தோழிகளுக்கு ஆபாச படங்களை தினகர் பிரசாத் அனுப்பியுள்ளார்.

மேலும் இதே மின்னஞ்சலை அந்த மாணவி பயிலும் பல்கலை கழகத்திற்கும் அனுப்பியுள்ளார். இந்த தகவல் கிடைத்த தஞ்சை மாணவி காவல்துறையிடம், தினகர் பிரசாத் குறித்து புகாரளித்தார்.

அதில், "தன்னிடமிருந்து பயோடேட்டாவை பெற்றுக் கொண்ட தினகர் பிரசாத், தினமும் போனில் தொந்தரவு செய்ய ஆரம்பித்து விட்டார்.

இவ்விசயத்தை தான் கண்டித்த நிலையில் கடந்த மாதம் தனக்கு ஆபாச படங்கள் வந்தது. இதை பார்த்து பதறிப்போன மாணவி பிரசாத்தை எச்சரித்தார். அதற்கு அவர் என்னை திருமணம் செய்யாவிட்டால் இன்னும் என்ன நடக்கிறது பார் என கூறி மிரட்டியுள்ளார். சில நாட்கள் கழித்து மாணவியின் தோழிகளின் மின்னஞ்சலுக்கும் ஆபாச படங்கள், நிர்வாண படங்கள் வந்தது. அந்த படங்கள் அனைத்தும் குறித்த மாணவியின் மின்னஞ்சலிருந்து அனுப்பப்பட்டது போல அனுப்பப்பட்டு உள்ளது.
இதற்காக அவர் மாணவியின் பயோடேட்டா, போட்டோவைக்கொண்டு ஒரு போலி மின்னஞ்சல் உருவாக்கி இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளார். எனவே அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த புகாரில் கூறப் பட்டுள்ளது.

புகாரை பெற்றுக் கொண்ட மகளிர் காவல்துறையினர் தினகர் பிரசாத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.

ad

ad