கிணற்றில் விழுந்த பெண்–சிறுமியை காப்பாற்றிய போலீஸ் ஏட்டுக்கு 1 லட்சம்: ஜெ., அறிவிப்பு
முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் கிராமம், வடக்குத் தெருவில் வசித்து வரும் கண்ணன் என்பவரின் மனைவி வசந்தி 22.6.2013
கிணற்றில் விழுந்த இருவரும் கூச்சல் போட்டு
உயிருக்குப் போராடிய நிலையில், அங்கு வந்த ராமநாதபுரம் மாவட்டம், தனிப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை தலைமைக் காவலர் சுபாஷ் சீனிவாசன் என்பவர் தன் உயிரையும் பொருட்படுத்தாமல், சமுதாய அக்கறையோடு கிணற்றுக்குள் குதித்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வசந்தி மற்றும் ம
கேஸ்வரி ஆகிய இருவரையும் கயிறு மூலம் கிணற்றிலிருந்து மேலே கொண்டு வந்து காப்பாற்றியுள்ளார்.
உயிருக்குப் போராடிய நிலையில், அங்கு வந்த ராமநாதபுரம் மாவட்டம், தனிப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை தலைமைக் காவலர் சுபாஷ் சீனிவாசன் என்பவர் தன் உயிரையும் பொருட்படுத்தாமல், சமுதாய அக்கறையோடு கிணற்றுக்குள் குதித்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வசந்தி மற்றும் ம
கேஸ்வரி ஆகிய இருவரையும் கயிறு மூலம் கிணற்றிலிருந்து மேலே கொண்டு வந்து காப்பாற்றியுள்ளார்.
தலைமைக் காவலர் சுபாஷ் சீனிவாசன் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் துணிச்சலுடன் கிணற்றுக் குள் இறங்கி வசந்தி மற்றும் மகேஸ்வரி ஆகிய இருவரையும் காப்பாற்றியமைக்கு எனது பாராட்டுதல் களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தலைமைக் காவலர் சுபாஷ் சீனிவாசனின் தீரச் செயலையும், தன்னலம் கருதா அவரின் சமுதாய அக்கறையையும், கடமை உணர்வையும் பாராட்டி அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்’’என்று கூறப்பட்டு