புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 அக்., 2013

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ஜெயலலிதா கொடுத்த யானை தமிழகம் முழுவதும் தெருத்தெருவாக பிச்சை எடுக்கும் பரிதாபம்
கடந்த 2011-ம் ஆண்டு திருச்சி, ஸ்ரீரங்கம் கோயிலுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் பரிசாக வழங்கப் பட்டது சிமித்ரா என்கிற சுமி யானை.  அந்த யானைக்கு காயம் ஏற்பட்டதால்
சிகிச்சைக்காக பெங்களூரூவிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.


ஆனால் அவ்வாறு பெங்களூரூவிற்கு அனுப்பி வைக்கப்படாமல், சென்னையில் பிச்சை எடுத்ததாகவும், அப்போது யானை பாகன் மீது போலீசார் வழக்குப் பதிந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பெரியார்நகர் அதன் சுற்றுப் பகுதியில் உள்ள கடை வீதிகளிலும், தெருத்தெருவாக வீடுகளிலும் இந்த யானை பிச்சை எடுக்க பயன்படுத் தப்பட்டது தெரியவந்துள்ளது.

ad

ad