புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 டிச., 2013

ஜெயலலிதா உட்பட யார் பிரதமராக வந்தாலும் வரவேற்போம்: திருச்சியில் தேவகவுடா பேட்டி
ஜெயலலிதா உட்பட யார் பிரதமராக வந்தாலும் வரவேற்போம் என்று மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 


தென் இந்தியாவில் இருந்து ஜெயலலிதா உட்பட யார் பிரதமராக வந்தாலும் வரவேற்போம். டெல்லி, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சி மீது மக்களுக்கு உள்ள அதிருப்தியை காட்டுகிறது. 
டெல்- தேர்தல் முடிவுகள் மூலம் ஆம் ஆத்மி கட்சி அரசியலில் புதிய கலாச்சாரத்தை அறிமுகம் செய்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் பொது வாழ்வில் புது அறிமுகம். பண பலம், சாதி, மதம் ஆகியவற்றை மீறி காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளை தோற்கடித்து அரசியலில் புதிய கலாச்சாரத்தை உருவாகியுள்ளார் என்றார்.

ad

ad