புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 டிச., 2013

 வடக்கில் சகல நடவடிக்கைகளிலிருந்தும் இராணுவம் விலகிக்கொள்ள வேண்டும்; சலோகா பெயானி
சிறிலங்காவின் வடக்கில் இடம்பெயர்ந்த நிலையில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்கள் மிகவும் ஆபத்தான நிலையிலேயே வாழ்ந்து வருவதாக இடம்பெயர்ந்தோர் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான
ஐ.நாவின் விசேட பிரதிநிதி சலோகா பெயானி தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் இடம்பெயர்ந்த மக்களின் கணிசமான அளவு மக்கள் இன்னும் இடம்பெயர்ந்த நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். வடக்கில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கு நிரந்தரமான வீடுகள், சமூக சேவைகள் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

இடம்பெயர்ந்தவர்களின் நிலைமைகள் குறித்து மதிப்பீடு செய்வதற்காக சிறிலங்காவிற்கு அண்மையில் விஜயம் செய்திருந்த பெயானி தனது இலங்கை விஜயம் தொடர்பான அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 

பெண்கள், யுவதிகள் மற்றும் சிறார்கள் முக்கியமான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். பெண்களின் இனப்பெருக்கம் தொடர்பான உரிமைகள், உடலியல் ரீதியான பாதுகாப்பு பிரச்சினைகள் உட்பட பல விடயங்கள் இதில் அடங்கும். காணிகள் தொடர்பான சாத்தியமில்லாத அணுமுறை, சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்ல முடியாமை, சுதந்திரமான நடமாட்டம். இராணுவத்தின் தேசிய பாதுகாப்பு தொடர்பான கவலைகள் என்பனவும் அதில் அடங்கும்.

மோதல்களினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வை பெற்றுக்கொடுக்க வெளிப்படையாக தகவல்களுடன்
-

ad

ad