வித்தியா விவகாரத்தில் தனக்கு தொடர்பில்லையென்கிறார் சந்தேகநபரொருவர்.
வித்தியா கொலை வழக்கில் கைதானவர்கள் தொடர்பில் தெளிவான ஆதாரங்கள் உள்ளதாக பொலிசார் கூறிவரும் நிலையில், இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஒரு பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள ஒன்பது நபர்களில் ஒருவர், சம்பவம் நடந்த தினத்திலன்று தான் கொழும்பில் நின்றதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கொலை நடந்த நாளான மே 13 ஆம் திகதி தான் கொழும்பில் இருந்ததாகவும், அதற்கான ஆதாரம் காணொளியில் உள்ளது எனவும் இன்று இடம் பெற்ற வழக்கு விசாரணையின் போது சந்தேக நபர்களில் ஒருவர் தெரிவித்தார்.
அன்றைய தினம் கொழும்பு வெள்ளவத்தை ஹட்டன் நஷனல் வங்கி கிளையில் பணமெடுத்ததாகவும் அதற்கான ஆதாரங்கள் வங்கி காணொளியில் இருக்கும் எனவும் அதனை பரிசீலிக்குமாறும் கேட்டுக்கொண்டார்