புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜூன், 2015

கணவனும் மனைவியும் சடலமாக மீட்பு! யாழ். வடமராட்சி கிழக்கில் சம்பவம்

யாழ். வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று தெற்கு, தாளையடிப் பகுதியில், கணவன் மற்றும் மனைவி ஆகியோர் நேற்று இரவு 9.30 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
நேற்று திங்கட்கிழமை இரவு கணவன், மனைவி ஆகிய இருவரும் குடும்ப தகராறில் ஈடுபட்ட போது, மனைவியின் கழுத்தை கணவன் அறுத்துக் கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து தானும் கழுத்தை அறுத்துக் கொண்டு கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 40 வயதான சிவபாலன் மற்றும் அவரது மனைவியான 40 வயதான சுபாஷினி என தெரியவருகின்றது.
சம்பவத்தின் போது சுபாஷினியின் தாயாரும் உடனிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ad

ad