புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஆக., 2015

புதிய அர­சாங்­கத்தை தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக கூட்டமைப்பே விளங்கும்! - முன்னாள் எம்.பி. சிவ­சக்தி ஆனந்தன்


தென்­னி­லங்­கையில் வர­வி­ருக்­கின்ற புதிய அர­சாங்­கத்தை தீர்­மா­னிக்கும் முக்­கிய சக்­தி­யாக கூட்­ட­மைப்பே விளங்கும் என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின்
வன்னி மாவட்ட வேட்­பா­ளரும் முன்னாள் எம்.பியு­மான சிவ­சக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வவு­னியா, உள்­வட்ட வீதியில் உள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முத­லா­வது பிர­சாரக் கூட்­டத்தின் போதே இதனைத் தெரி­வித்தார்.
அவர் தொடர்ந்து அங்கு கருத்து தெரி­விக்­கையில்,
தென்­னி­லங்­கையில் ஆட்சி அதி­கா­ரத்தை யார் பெறு­வது என்ற போட்டி நடைபெறுகி­றது. எங்­களைப் பொறுத்தவரை ஜன­வரி மாதம் 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழ் பேசும் மக்­களே ஜனா­தி­ப­தியைத் தீர்மானித்­தனர். இதனை அர­சாங்­கத்­திற்கும், சர்­வ­தே­சத்­திற்கும் செய்து காட்டியுள்ளோம். குறிப்­பாக முன்­னைய ஜனா­தி­பதி தமிழ், முஸ்லிம் மக்­களின் ஆதவை பெறாமல் 70 வீத­மா­க­வுள்ள சிங்­கள மக்­களை வைத்து தாம் வென்றுவிடலாம் என்றே செயற்­பட்டார். ஆனால் அது நடை­பெ­ற­வில்லை.
இதே­போல தான் தற்­போ­தைய பாரா­ளு­மன்ற தேர்­த­லிலும் கடும் போட்டி நிலை நில­வு­கி­றது. இந்த பாரா­ளு­மன்றம் கூட அறுதிப் பெரும்­பான்­மை­யுடன் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியோ அல்­லது ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியோ ஆட்சி அமைக்க முடி­யாத நிலை தான் இன்று தெற்கில் ஏற்­பட்­டுள்­ளது. ஆகவே, அடுத்த மூன்றாவது பெரிய அணி­யாக தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தான் வர­வேண்­டிய தேவை­யுள்­ளது. குறிப்­பாக வடக்­கிலும், கிழக்­கி­லு­மாக 18 தொடக்கம் 20 வரை­யான பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை பெற்று நாம் மூன்­றா­வது அணி­யா­க­வேண்டும்.
அப்ப­டி­யான ஒரு சந்­தர்ப்­பத்தில் தேசிய அர­சாங்­கத்தை அல்­லது புதிய அரசாங்கத்தை தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தான் இருக்கப் போகி­றது. நூற்­றுக்கு நூறு வீதம் வாக்­க­ளிக்க வேண்­டிய கடமை எமக்கு இருக்­கி­றது. காரணம் 2004 ஆம் ஆண்டு 22 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை கூட்­ட­மைப்பு பெற்­றி­ருந்­தது. ஆனால் 2010 ஆம் ஆண்டு அப்­படி இருக்­க­வில்லை. காரணம் அப்போது அச்­சு­றுத்­த­லான நிலை காணப்­பட்­டது. ஆனால் தற்­போது அச்­சு­றுத்தல் பெரி­தாக இல்லை. ஆத­லினால் நாம் அனை­வரும் முழு­மை­யாக வாக்­க­ளித்து மீண்டும் 2004 ஆம் ஆண்­டி­னைப்போல் அதிக ஆச­னங்­களைப் பெற­வேண்டும்.
குறிப்­பாக வன்­னி ­மா­வட்­டத்தில் உள்ள வாக்­காளர்­களின் எண்­ணிக்­கையைப் பொறுத்­த­வரை நாங்கள் 5 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களைப் பெறக் கூடிய நிலை இருக்­கி­றது. ஆனால் 2010 ஆம் ஆண்டு நடை­பெற்ற தேர்­தலில் வாக்­க­ளிப்பு வீதம் 38 ஆக இருந்­தது. இதனால் தான் மூன்று தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பைச் சேர்ந்தவர்களும் மூன்று வேறு கட்­சி­களைச் சேர்ந்­த­வர்­களும் என பிர­தி­நி­தித்­துவம் பிரிந்து செல்லக் கூடிய நிலை இருந்­தது. அன்­றி­ருந்த நிலை­மைகள் முற்­றாக மாறியுள்­ளது. தற்­போது வாக்­கா­ளர்­களின் எண்­ணிக்­கையும் அதி­க­ரித்­துள்­ளது.
எனவே அவர்கள் ஒவ்­வொ­ரு­வ­ரையும் வாக்­க­ளிக்கச் செய்ய வேண்­டி­யது ஒவ்வொரு­வ­ரி­னதும் கடமை. அந்த வாக்­குகளை தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு அளிக்க வேண்­டிய தேவை இருக்­கின்­றது. போர் முடிந்து 6 ஆண்­டுகள் கடந்த போதும் எமது அடிப்­படை பிரச்­சினைகள் உள்­ளிட்ட பல பிரச்­சி­னைகள் இன்னும் தீர்க்­கப்­ப­ட­வில்லை.
காணாமல் போனோர், சர­ண­டைந்தோர், வெள்ளைவேனில் கடத்­தப்­பட்டோர், மீள்கு­டி­யேற்றம் என உட­ன­டி­யாக தீர்வு காணப்­பட வேண்­டிய பல பிரச்­சி­னை­களும் இருக்­கின்ற அதே­வேளை அர­சியல் தீர்வு விடயம் தொடர்­பாக புதிய அரசாங்கத்துடன் பேச வேண்­டி­யுள்­ளது. இதற்கு எமக்கு இருக்­கின்ற பலம் மக்களின் ஆத­ரவு தான். ஆகவே மக்­களின் தேவை­க­ளையும் இந்த பிரச்சினைகளையும் தீர்க்க ஜன­நா­யக ரீதி­யாக நீங்கள் வாக்­க­ளிப்­பது பலம். ஒவ்வொரு தேர்­தலும் வரு­கின்ற போது பல சுயேச்சை குழுக்­களும் கட்­சி­களும் போட்­டி­யிட்டு வாக்கை சித­ற­டிக்­கின்­றன. இன்றும் கூட வன்­னியில் கட்­சி­களும் சுயேச்­சைக­ளு­மாக 28 குழுக்கள் போட்­டி­யி­டு­கின்­றன. இந்த நிலையை உணர்ந்து வாக்­குகள் சித­றாமல் தடுத்து தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு வாக்­க­ளிக்க வேண்டும்.
ஏனைய கட்­சி­களுக்கு அளிக்கும் உங்கள் வாக்கு வீணாகப் போய்­விடும் என்­பதே உண்மை. நவம்பர் மாதம் ஐக்­கிய நாடுகள் ஸ்தாப­னத்தில் இருந்து மனித உரிமை மீறல் தொடர்­பான தீர்­மானம் கொண்டு வரப்­பட இருக்­கி­றது. இதனை வலுப்­ப­டுத்த வேண்டும். அதற்கு கூட்­ட­மைப்பை பலப்­ப­டுத்த வேண்டும். ஆயி­ரக்­க­ணக்­கான போரா­ளிகள், பொது­மக்கள் மடிந்­தி­ருந்­தி­ருக்­கி­றார்கள் எமக்­காக. அவர்­க­ளுக்­காக நாம் செய்யும் புனிதக் கடமை இந்த வாக்­க­ளிப்பு தான். அதனை நாம் சரி­யாக செய்ய வேண்டும். தற்­போது அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன் மக்­களின் வறு­மையைப் பயன்படுத்தி அவர்­க­ளுக்கு தையல் இயந்­தி­ரத்தை கொடுத்­து­விட்டு வாக்கைப் பெற முயல்­கிறார்.
டக்ளஸ் தேவா­னந்தா கூட மக்­களின் வறு­மையை வைத்து வாக்கைப் பெற முனை­கிறார். கடந்த 2010 ஆம் ஆண்டு கூட இப்­படித் தான் நடந்­தது. மக்­க­ளுக்கு பொருட்­களை வழங்கி எமது தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்ற இவர்கள் ஐ.நா.விற்கு சென்று தமிழ் மக்களை இராணுவம் சுடவில்லை. புலிகள் தான் சுட்டார்கள் என தமிழ் மக்களுக்கு எதிராகவும் மஹிந்தவுக்கு சார்பாகவும் பிரசாரங்கள் செய்தமையை எமது மக்கள் மறந்து விடக்கூடாது. எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்தி வரும் அரசாங்கத்தை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக அதனை திகழச் செய்ய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. அதனை நீங்கள் நிறைவேற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ad

ad