லண்டனில் ஓடும் தமிழீழ பேரூந்து….
தமிழீழத் தேசிய கொடியுடன் லண்டனில் ஓடும் சொகுசு பேரூந்து . லண்டன் நகர வீதிகளில் ஓடி, அந் நாட்டவரின் கவனத்தை ஈர்த்தது வருகிறது.
இந்த பேரூந்தில் தமிழீழ தேசத்தின் வரைபடம், தமிழீழத்தின் தேசிய மலர், தேசிய கொடி, தேசிய பறவை, மற்றும் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தமிழினப் படுகொலைகள், போர்க் குற்றங்கள் போன்ற படங்கள் பேரூந்து முழுவதும் வரையப்பட்டும், பல மொழிகளில் வாசகங்களாக எழுதப்பட்டும் உள்ளது. தமிழீழ அடையாளங்களை மற்றும் தமிழருக்கு இலங்கை அரசால் நடந்த கொடுமைகளையும் லண்டன் வாழ் அனைத்து இன மக்களிடமும் கொண்டு சேர்க்கும் முயற்சியிலும், தமிழீழத்தை அடையாளப்படுத்தியும் இப் பேரூந்து இயங்கி வருகிறது…