புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 அக்., 2016

அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வை தருவதாக புதிய அரசியல் யாப்பு அமையவேண்டும்-சுவிஸ் சபாநாயகர் அறிவுறுத்து

இலங்கையில் தயாரிக்கப்பட்டுவரும் புதிய அரசியல் சாசனம் நாட்டின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் நிரந்தரத் தீர்வை பெற்றுக்கொடுக்கக் கூடியதாக அமையும் என சுவிஸர்லாந்து சபாநாயகர் கிறிஸ்டா மார்க்வெல்டர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கு விஜயம்செய்துள்ள சுவிஸர்லாந்து சபாநாயகர் நேற்றைய தினம் கண்டிக்கு விஜயம்செய்து சிங்கள பௌத்த மக்களின் புனித ஸ்தலமான கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், மல்வது பீட மகாநாயக்கத் தேரரரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதனையடுத்து ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்த அவர், அரசியல் யாப்பு மறுசீரமைப்புப் பணிகளின் முக்கி யத்துவத்தை எடுத்துரைத்தார்.

இலங்கை அரசாங்கத்தின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், சபாநாயகர் கரு ஜயசூரிய உட்பட முக்கியஸ்தர்களுடன் இடம்பெற்ற சந்திப்புக்களின் போதும் அரசியல் யாப்பு மறுசீரமைப்புப் பணிகள் தொடர்பில் முக்கியமாக ஆராயப்பட்டதாகவும் சுவிஸர்லாந்து சபாநாயகர் தெரிவித்தார்.

அதேவேளை இந்த அரசியல் யாப்பு மறுசீரமைப்புப் பணிகளின் போது அனைத்து அரசியல் கட்சிகளும், பொது அமைப்புக்களும் தமது கருத்துக்களை வெளியிட்டு அவை தொடர்பில் விரிவாக கலந்துரையாடுவதற்கான களமொன்று உருவாக்கப்பட்டுள்ள தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய இலங்கையிலுள்ள அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணக்கூடியதும், அனைத்து மக்களையும் ஒருங்கி ணைத்துக்கொண்டு நாட்டை முன்னோக்கி நகர்த்தக்கூடியதுமான சிறந்த அரசியல் யாப்பொன்று உருவாக்கம்பெறும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஏராளமான புலம்பெயர் மக்கள் சுவிஸர்லாந்தில் வாழ்ந்து வருவதால் இலங்கைக்கும் – சுவிஸர்லாந்துக்கும் இடையில் நல்ல உறவுகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ள சுவிஸர்லாந்து சபாநாயகர் கிறிஸ்டா மார்க் வெல்டர், பொருளாதார ரீதியாகவும் இரு நாடுகளுக்கிடையிலும் சிறந்த உறவு நிலவுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

ad

ad