புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 அக்., 2016

புதிய கட்சி உருவாக்கம் பணிகள் மும்முரம்-பசில்

புதிய கட்சியை உருவாக்குவதற்கான பணிகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, இலட்சினை, கட்சியின் பெயர் மற்றும் தலைவர் உள்ளிட்ட விபரங்கள் பின்னர் அறிவிக்க ப்படுமென முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
 
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நான்கு தடவைகள் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடு விக்கப்பட்டுள்ள பசில், இன்று காலை 9.30 மணி  அளவில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.
 
ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியமளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

“மக்களுக்கு  ஏற்படும் இடையூறுகளை களைவதற்கே நாம் எதிர்ப்பார்க்கின்றோம். அரசாங்கம் மிகவும் கடுமையாக நடந்துகொள்வதோடு, நாட்டின் இறையாண்மையை இல்லாமல் செய்ய முயற்சிக்கின்றது.
 
விசேடமாக எட்கா உடன்படிக்கையின் ஊடாக நாட்டிலுள்ள இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும். பெருந்தோட்ட மக்களின் வேலை வாய்ப்புகளும் இல்லாமல் போகும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாக மாத்திரமல்ல வேறு வழிகளிலும் நாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவற்றை நிறுத்த வேண்டும்.
 
புதிய கட்சியை உருவாக்குவதற்கான பணிகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இலட்சினை, கட்சியின் பெயர் மற்றும் தலைவர் தொடர்பி

ad

ad