சப்ரகமுவையில் நாம் முதலமைச்சர் பதவி கேட்கவில்லை! புரிந்துகொண்டு தமிழர்கள் வாக்களிக்க வேண்டும்!- மனோ கணேசன்
சப்ரகமுவ மாகாணசபையின் முதலமைச்சர் பதவியை இன்று நாம் கோரவில்லை. எமது தேவையெல்லாம், இந்த மாவட்டங்களில் சிறுபான்மையாக வாழும் எமக்கு உரிய, எமது இனத்தின் பிரதிநித்துவம்தானே தவிர வேறு எதுவும் இல்லை. என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.