பிரித்தானியா, கனடா நாடுகளில் இருந்து செல்லும் தொலைபேசி அழைப்புக்களை ஒட்டுக்கேட்கும் இலங்கை உளவுத்துறை
பிரித்தானியா மற்றும் கனடாவில் இருந்து இலங்கைக்கு தமது அழைப்புக்களை மேற்கொள்ளும் நபர்களின் தொலைபேசி உரையாடல்களை இலங்கை அரச புலனாய்வு துறை ஒட்டுக்கேட்கிறதாக தகவல்கள் கசிந்துள்ளன.
புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளை பேணுபவர்கள் மற்றும் வர்த்தக ரீதியில் உரையாடுபவர்கள் தொடர்பாக இந்த நகர்வினை அது முடுக்கி விட்டுள்ளது.