புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 அக்., 2012


இலங்கை சிறையிலிருந்த கே.பி. விடுதலை 
2009-ம் ஆண்டு இலங்கை ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற உள்நாட்டுப் போரில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டனர். அப்போது, கே.பி. என்றழைக்கப்பட்ட குமரன் பத்மநாதன் என்ற விடுதலைப்புலிகளின் கடைசி தளபதியும் இலங்கை ராணுவத்திடம் பிடிபட்டார்.
 இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை இப்போது இலங்கை ராணுவம் விடுதலை செய்துள்ளது.  இதுதொடர்பாக இலங்கை ராணுவ தலைமை செய்தித் தொடர்பாளர் லக்‌ஷ்மன் ஹலுகல்லே’’விடுதலைப் புலிகளின் கடைசித் தலைவரான 58 வயதான கே.பி. என்கிற குமரன் பத்மநாதன் இனி சிறையில் இருக்கத் தேவையில்லை.

அவரின் தொண்டு நிறுவனப் பணிகளை தொடர்ந்து செய்வதற்காக விடுதலை செய்யப்படுகிறார்.

இந்த பகுதியில் சிறப்பாக மக்களுக்கு சேவைகள் செய் து வரும் அவரது நிறுவனம், மேலும் திறம்பட செயல்படுவதற்கு தேவையான அனைத்து உரிமைக ளையும் அவர் பெறுகிறார்.

ad

ad