சுமார் 2ஆயிரம் இலங்கையர்கள் சுவிட்சர்லாந்தில் உள்ளனர். இவர்களில் சிலர் சூரிச் விமான நிலையத்தில் உள்ள தடுப்பு முகாமில் ( சிறையில்) உள்ளனர். கடந்த ஆண்டு சுமார் 1800இலங்கையர்கள் முகவர்கள் மூலம் சுவிட்சர்லாந்திற்கு வந்து அகதி தஞ்ச விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தனர். கடந்த ஆண்டு சுமார் 1800இலங்கையர்கள் முகவர்கள் மூலம் சுவிட்சர்லாந்திற்கு வந்து அகதி தஞ்ச விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தனர். வாரத்திற்கு இரண்டு மூன்று பேர் கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகம் விசா வழங்கி அனுப்பி வைக்கிறது.
இலங்கையில் முக்கியமாக யாழ்ப்பாண தமிழர்களின் பொருளாதாரம் ஒரு காலத்தில் மணிஓடர் பொருளாதாரம் என சொல்வார்கள். கொழும்பிலும் வெளிமாவட்டங்களிலும் அரச உத்தியோகத்தர்களாக இருக்கும் தமது குடும்ப தலைவர்கள் மற்றும் பிள்ளைகள் அனுப்பும் மணிஓடரை நம்பி வாழும் நிலை காணப்பட்டது.