புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஏப்., 2013


இசைப்பிரியாவுக்கு நேர்ந்த கொடுமை ஹரிணிக்கு நேரக்கூடாது!- பிரதமருக்கு வைகோ கடிதம்

துபாயில் இருந்து 19 ஈழத் தமிழர்கள் கொழும்புக்கு அனுப்பப்படவுள்ளனர். அவ்வாறு அனுப்பப்பட்டால், அவர்கள் சித்திரவதை செய்து கொல்லப்படுவார்கள் என்பதால், அவர்களைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, வைகோ கடிதம் அனுப்பியுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, வைகோ எழுதியுள்ள கடிதத்தில்,
துபாயில் இருந்து 19 ஈழத் தமிழர்கள் கொழும்புக்கு அனுப்பப்பட உள்ளனர். அவ்வாறு அனுப்பப்பட்டால், அவர்கள் சித்திரவதை செய்து கொல்லப்படுவார்கள் என்பதால், அவர்களைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி, தங்களுக்கு இக்கடிதத்தை எழுதியுள்ளேன்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந் தேதி, தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக 45 ஈழத் தமிழர்கள் அவுஸ்திரேலியாவுக்குப் பயணித்த போது, அவர்கள் சென்ற மரக்கலம் பழுது பட்டதால், தங்கள் உயிர்களைக் காக்குமாறு அபயக்குரல் எழுப்பினர்.
அப்பொழுது துபாயைச் சேர்ந்த சரக்குக் கப்பலில் இருந்த மாலுமிகள் அவர்களைக் காப்பாற்றி, தங்கள் கப்பலில் ஏற்றி துபாயில் கொண்டு போய்ச் சேர்த்தனர். சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலமாக வெளிநாடுகளில் அத் தமிழர்கள் அடைக்கலம் கேட்டனர்.
ஸ்வீடன் நாடு 7 ஈழத் தமிழர்களையும், அமெரிக்கா ஒருவரையும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது. 6 ஈழத் தமிழர்கள் கட்டாயப்படுத்தி, அவர்கள் விருப்பத்திற்கு மாறாக கொழும்புக்கு அனுப்பப்பட்டனர்.
மீதம் இருக்கக்கூடிய 31 தமிழர்களுள், 19 பேரை, அவர்களின் விருப்பத்திற்கு மாறாக, ஒரு வார காலத்துக்குள், கட்டாயமாக இலங்கைக்கு அனுப்பப் போவதாக துபாய் அரசு அறிவித்துள்ளது.
இந்த 19 பேர்களுள் ஒருவரான இளம்பெண் ஹரிணி, தமிழ் ஈழ தேசிய தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணி ஆற்றியவர்.
இதே போன்ற செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றிய இளம்பெண் இசைப்பிரியா, சிங்கள இராணுவத்தினரால் மிகக் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு, படுகொலைக்குள்ளான காட்சியை சனல்4  தொலைக்காட்சி காணொளி மூலம் 2010ல் வெளியிட்டதால், உலகெங்கும் உள்ள மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினர்.
இப்போது ஹரிணி கொழும்புக்கு அனுப்பப்பட்டால், அதே போன்ற கொடுமை நிகழும்; ஹரிணியும் கொல்லப்படுவார்.
எனவே, துபாயில் இருக்கின்ற 19 ஈழத்தமிழர்களையும் இலங்கைக்கு துபாய் அரசு அனுப்பவிடாமல், மனிதாபிமான அடிப்படையில் அவர்களைப் பாதுகாக்க ஐக்கிய அரபு குடியரசு மூலம் உடனடி நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டுகிறேன் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் ஹரிணி உள்ளிட்ட 19 பேரை பாதுகாப்பதற்காக, வைகோ நேற்றைய தினம் முன்னாள் வெளிவிவகார அமைச்சர்கள் யஷ்வந்த் சின்காவையும், ஜஸ்வந்த் சிங்கையும் புதுடெல்லியில் நேரில் சந்தித்து நிலைமையை விளக்கி கடிதமும் கொடுத்துள்ளார்.
இது குறித்துத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக, அவர்கள் இருவரும் வைகோவிடம் உறுதி அளித்துள்ளனர்.

உண்ணாவிரதத்திற்கு வராத நடிகர், நடிகைகள் மீது நடவடிக்கை?
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நேற்று நடிகர் சங்கம் நடத்திய உண்ணாவிரதத்துக்கு ரஜினி உட்பட கணிசமான நடிகர்கள் வந்திருந்தனர்

நேரடி தகவல் 
Delhi Daredevils 128 (20/20 ov)
Kolkata Knight Riders 51/1 (6.4/20 ov)

ஜெயலலிதாவை அவதூறாகப் பேசிய வழக்கு: திண்டுக்கல் லியோனிக்கு நோட்டீஸ்

முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக திமுக பேச்சாளர்கள் திண்டுக்கல் லியோனி உள்ளிட்ட இரண்டு பேரும் திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


30 ஓநாய்கள் சேர்ந்து புலியைக் கொன்றது பெரிய விஷயம் அல்ல.

ரமேஷ் கன்னா இலங்கை தமிழர்களின் கோரிக்கையான தமிழ் ஈழம் அமைய வேண்டும். மத்திய அரசு தமிழகம் இந்தியாவில் இருக்கிறது என்பதை உணர்ந்து தமிழர்களுக்கு உதவ வேண்டும். 30 ஓநாய்கள் சேர்ந்து புலியைக் கொன்றது பெரிய விஷயம் அல்ல. ஓநாய் எப்பொழுதும் ஓநாய் தான், புலி புலி தான் என்று ரமேஷ் கன்னா கூறினார்.


ஐ.சி.சி 20க்கு 20 தரவரிசை இலங்கை அணி தொடர்ந்தும் முதலிடத்தில்

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஒற்றை டுவென்டி 20 சர்வதேசப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுக்

5 அணிகள் மோதும் ஆசிய ரக்பி போட்டி; முதல் போட்டியில் இலங்கை வெற்றி

இலங்கையில் நேற்றுமுன்தினம் ஆரம்பித்த ஐந்து அணிகள் பங்குகொள்ளும் ஆசிய ரக்பி உதைபந்தாட்டப் போட்டிகளின் முதலாவது பிரிவு அணிகளுக்கான போட்டிகளில் தனது

2 ஏப்., 2013


புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் : சரத் பொன்சேகா

இன்று என் வாழ்க்கையில் முக்கியமான நாள். நாட்டு மக்கள் அனைவரும் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கி நாட்டை யுத்தத்திலிருந்து மீட்டது போன்று அராஜக

ஒருவர் தன்னுடை மதத்தினை மாத்திரமல்லாது ஏனையவர்களின் மதத்தினையும் அவர்களுடைய கலாசாரத்தையும் மதித்து நடக்க வேண்டும். 
அப்போதே நாம் சிரேஷ்ட மனிதர்களாக முடியும். இதேவேளை ஏனையவர்களின் மதத்தில் குறைகாண்பவர்கள் ஒரு போதும் உண்மையான பௌத்தர்களாக இருக்க முடியாது என்று பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்தார். 

ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு சிவப்பு கம்பள மரியாதை: என் தாயாரை பிடித்து தள்ளுவதா? லோரன்ஸ்


0இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு திருப்பதி கோவிலில் சிவப்பு கம்பளம் விரித்து மரியாதை செய்கிறார்கள். ஆனால் இந்தியாவை சேர்ந்த, குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு நடிகரான என்னுடைய தாயாரை கோவில் ஊழியர்கள் பிடித்து தள்ளியது தரக்குறைவான செயலாகும் என நடிகர் லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வடபகுதிகளில் தமிழர்களுக்கெதிரான வன்முறைகள் அண்மைக்காலங்களில் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்திருக்கும் மூன்று இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் முறையான ஆவணங்களில்லாது இந்தியா வந்திருப்பதால் அவர்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றக்காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக

உண்ணாவிரதத்துக்கு வந்த த்ரிஷா மற்றைய அனைத்து நடிகைகளும் புறக்கணிப்பு

நடிகர் சங்கம் இன்று நடத்திய உண்ணாவிரதத்தில் நடிகை த்ரிஷா கலந்து கொண்டார். ஆனால் அதற்கு முன் அவர் கலந்து கொண்டது ஒரு ஐஸ் க்ரீம் அறிமுக நிகழ்ச்சி. இன்றைய உண்ணாவிரதத்தில்

உண்ணாவிரதத்துக்கு வரவே இல்லை விஜய்…

சென்னையில் நடிகர் சங்கம் ஈழத் தமிழருக்காக நடத்திய உண்ணாவிரதத்தில் ஆப்சென்டான மிக முக்கியமான ஒருவர் நடிகர் விஜய். ஆனானப்பட்ட சூப்பர் ஸ்டாரே தன் உடல்நிலையைப்

இது உண்ணாவிரதமல்ல, பேசாவிரதம்: ஒருத்தரும் வாய் திறக்கவில்லை!நடிகண்டா

நடிகர் சங்கம் உண்ணாவிரதம் நடத்தினாலும், வழக்கம் போல் அங்கே யாரும் பேசவில்லை. வந்தார்கள், அமைதியாக உட்கார்ந்தார்கள், பலர் அங்கேயே இருந்தனர்.. சிலர் சில மணி

முன்னணி நடிகைகள் பலரும் வரவில்லை .. மாலையில் வந்தார் கமல்!

நடிகர் சங்கத்தினர் இன்று நடத்திய உண்ணாவிரதத்தில் பெரும்பான்மை நடிகர்கள் ஆஜராகிவிட, பிற்பகலுக்குப் பிறகும்கூட முன்னணி நடிகைகள் வரவே இல்லை. காலையில் உண்ணாவிரதம்

நடிகர் சங்க உண்ணாவிரதம் முடிந்தது: 7 தீர்மானங்கள் நிறைவேற்றம்
lekha-foods.gif


தென் இந்திய நடிகர்-நடிகைகள் சார்பில் தி.நகரில் உள்ள தென்இந்திய  நடிகர் சங்க கட்டிட வளாகத்தில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இன்று ஒருநாள் உண்ணாவிரதம் நடந்தது.

நடிகர் சங்க தலைவர் சரத்குமார் உண்ணாவிரதத்துக்கு தலைமை தாங்கி னார். நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி, துணைத் தலைவர் விஜயகுமார், பொருளாளர் வாகை சந்திரசேகர் முன்னிலை வகித்தனர்.

காலில் கட்டுடன் உண்ணாவிரதத்திற்கு வந்த நடிகர் அஜீத்குமார் ( படங்கள் )
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் - நடிகைகள் இன்று சென்னையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர்.   இதில் ரஜினிகாந்த், கமல், சத்யராஜ்

 ஈழத்தமிழர்களுக்கு விடியல் பிறக்க வேண்டும் என
இறைவனை பிரார்த்திக்கிறேன் : நடிகர் விஜய் கடிதம்
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் - நடிகைகள் இன்று சென்னையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர். 

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் இன்று உண்ணாவிரதம்! போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: நடிகர்கள்! 7 தீர்மானங்கள் நிறைவேற்றம்!
ஈழத் தமிழருக்கு ஆதரவாகவும், தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் கொண்டு வந்த தனி ஈழ வாக்கெடுப்பு உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றக் கோரியும் இன்று நடிகர் சங்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

புங்குடுதீவு மான்மியம் 
புங்குடுதீவு மான்மியம் என்ற சுமார் 700 பக்கங்கள கொண்ட இந்த நூல் ஐரோப்பிய மண்ணில் வாழும் தமிழர்கள் பெற விரும்பினால் எம்மோடு தொடர்பு கொள்ளவும் சொற்ப பிரதிகளே  கைவசம் உண்டு 
காலத்தால் அழியாத புங்குடுதீவு மண்ணின் வியத்தகு அனைத்து அம்சங்களும் ஒருங்கே இணைக்கபட்ட ஒரு ஆவணச் சொத்து இந்த நூலாகும்
tthamil 8@gmail .com .

ad

ad