புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஏப்., 2013


5 அணிகள் மோதும் ஆசிய ரக்பி போட்டி; முதல் போட்டியில் இலங்கை வெற்றி

இலங்கையில் நேற்றுமுன்தினம் ஆரம்பித்த ஐந்து அணிகள் பங்குகொள்ளும் ஆசிய ரக்பி உதைபந்தாட்டப் போட்டிகளின் முதலாவது பிரிவு அணிகளுக்கான போட்டிகளில் தனது
முதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.
சீன தைபே அணியை இலங்கை அணி 39-08 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி கொண்டது. ஹவலொக் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் இலங்கை அணி முதற்பாதியில் 06-03 என்ற கணக்கில் முன்னிலை வகித்த போதிலும், இரண்டாம் பாதியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 39-08 என்ற புள்ளிகளால் வெற்றிபெற்றது.
இத் தொடரின் முதலாவது போட்டியில் தாய்லாந்து அணி கஸகஸ்தான் அணியை 33-10 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி கொண்டிருந்தது. இப்போட்டிகளில் இலங்கை, சீன தைபே, கஸகஸ்தான், தாய்லாந்து ஆகிய நாடுகள் பங்குபற்றுகின்றமை குறிப்பிடத் தக்கது.

ad

ad