250 கடல் மைல் தொலைவில் 65 பேருடன் தத்தளிக்கும் படகு! மீட்பு பணிக்காக இலங்கை கடற்படை கப்பல் அனுப்பி வைப்பு
இலங்கையில் இருந்து 250 கடல் மைல் தொலைவில் தென்கிழக்கு கடற்பரப்பில் இயந்திர கோளாறு காரணமாக கடலில் தத்தளித்து வரும் படகில் உள்ளவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.