-
11 அக்., 2013
வடமாகாண சபை கூட்டமைப்பு உறுப்பினர்கள், அமைச்சர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் பதவியேற்பு! 8 உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை
வட மாகாண சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.
இன்று காலை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இந்த வைபவம் நடைபெறவுள்ளது.
10 அக்., 2013
தமிழ்நாட்டில் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை - இலங்கை அகதியும் தொடர்பு-BBC
தூத்துக்குடியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றின் முதல்வர் இன்று வியாழன் கல்லூரி வளாகத்திலேயே வெட்டிக் கொல்லப்பட்டார். இச் சம்பவம் தொடர்பாக இடைநிறுத்தம் செய்யப்பட்ட அக் கல்லூரி மாணவர்கள் மூவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
வடமாகாண அமைச்சுப் பதவிகள் அறிவிப்பு- ஐங்கரநேசனுக்கு அமைச்சுப் பதவி கொடுக்க வேண்டாம்: ஈ.பி.ஆர்.எல்.எப்
போருக்குப் பின்னரான சூழலை கருத்திற் கொண்டு உறுப்பினர்களின் தகைமைகள், அனுபவங்கள், நிபுணத்துவங்கள், விருப்பங்கள் போன்றவற்றின் அடிப்படையில் வடமாகாண சபைக்கான அமைச்சுத் தேர்வு இடம்பெற்றுள்ளது என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
ஐங்கரநேசனுக்கு அமைச்சுப்பதவி கொடுக்க வேண்டாம்: ஈ.பி.ஆர்.எல்.எப்/பிரேமச்சந்திரனின் சகோதரர் சர்வேஸ்வரனுக்கு வாங்கி கொடுக்கவே விருப்பம் தெரிவிப்பு
பொன்னுத்துரை ஐங்கரநேசனுக்கு வடமாகாண சபையில் அமைச்சர் பதவி கொடுக்க வேண்டாமென அவருடைய கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பீடத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது.
இலங்கையில் புடைவை வியாபாரம் செய்யும் வர்த்தகரான மொகமட் இம்தியாஸ் என்பவர் சென்னையில் இனந்தெரியாத குழுவினரால் கடத்தப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை செவன் வோல்ஸில் அமைந்துள்ள அவரது வீட்டில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஒரு கோடி ரூபாய் கப்பம் கேட்டு இவர் கடத்தப்பட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)