புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 அக்., 2013

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்கள் இன்று பதவியேற்றனர்.
இன்று காலை 9 மணிக்கு தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு அஞ்சலி செலுத்திய பின் உறுப்பினர்கள் அங்கிருந்து வீரசிங்கம் மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
வடமாகாண சபை கூட்டமைப்பு உறுப்பினர்கள், அமைச்சர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் பதவியேற்பு! 8 உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை
வட மாகாண சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.
இன்று காலை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இந்த வைபவம் நடைபெறவுள்ளது.
கடுமையான சட்டங்களுக்கு மத்தியில் இலங்கை அகதிகள் படகு அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசித்தது
அவுஸ்திரேலிய கொக்கோஸ் தீவுகளுக்கு இலங்கையில் இருந்து அகதி படகு ஒன்று சென்றுள்ளது.அபோட்டின் அரசாங்கம் அகதிகள் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகளை அறிவித்துள்ள நிலையில் இந்த படகு சென்றுள்ளது.
பொதுநலவாய மாநாடு: பிரித்தானிய பாராளுமன்றக் கதவைத் தட்டும் தமிழர் பேரவை
பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்ற பிரித்தானியத் தமிழர் பேரவையின் போராட்டம் பாராளுமன்ற கதவுகளை தொடர்ந்து தட்டுகிறது.
நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் பிரித்தானியப் பிரதமர் கமரூன், இளவரசர் சார்ள்ஸ் ஆகியோரை கலந்து கொள்ள வேண்டாமென்று,
இலங்கையில் ஐக்கிய நாடுகளின் தோல்வி அறிக்கை விரைவில் வெளியாகும்
இலங்கையின் இறுதிப்போரின் போது ஐக்கிய நாடுகள் சபை தமது கடமைகளில் இருந்து தோல்வி கண்டமை குறித்த ஆராய்வு அறிக்கை விரைவில் சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

பெற்ற மகளையே கட்டிப்போட்டு
கற்பழித்த தந்தைக்கு 14 ஆண்டு சிறை
 
ராஜபாளையம் சேத்தூர் சமத்துவபுரம் காலனியை சேர்ந்தவர் காளிமுத்து,38. இவருக்கு, ஈஸ்வரி, தங்கம் என, இரு மனைவிகள் உள்ளனர். 
தங்கத்தின் மகள் கவிதா,13,( பெயர் மாற்றப்பட்டுள்ளது). 
திருமாவளவன் கூட்டத்துக்கு தடை நீங்கியது

தாம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் அக்டோபர் 10 மண்ணுரிமை நாள் மற்றும் தலித் மற்றும் சிறுபான்மையினர் விடுதலை நாள் பொதுக்கூட்டம் இன்று மாலை மேற்கு தாம்பரம் சண்முகம் சாலையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

யுவராஜ் அதிரடியில் இந்தியா அசத்தல் வெற்றி: 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவுக்கெதிரான டி20 போட்டியில் யுவராஜ் அரை சதம் கடந்து கைகொடுக்க இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

10 அக்., 2013

அடக்க வந்த பொலிசை படுக்கை அறைக்கு அழைத்த நடிகை (வீடியோ இணைப்பு)

மராட்டிய மாநிலம் மும்பையின் புறநகர் பகுதியில் உள்ள அந்தேரி என்னும் இடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை அஞ்சும் நாயர் வசித்து வருகின்றார்.

தமிழ்நாட்டில் கல்லூரி முதல்வர் மாணவர்களால் படுகொலை - இலங்கை அகதியும் தொடர்பு-BBC
தூத்துக்குடியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றின் முதல்வர் இன்று வியாழன் கல்லூரி வளாகத்திலேயே வெட்டிக் கொல்லப்பட்டார். இச் சம்பவம் தொடர்பாக இடைநிறுத்தம் செய்யப்பட்ட அக் கல்லூரி மாணவர்கள் மூவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

ஐ.ஏ.எஸ் அதிகாரி வீட்டில் விபச்சாரம் செய்த ஐந்து பிரபல நடிகைகள் அதிரடி கைது. மும்பையில் பெரும் பரபரப்பு.

மும்பை ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு சொந்தமான ஒரு வீட்டில் ஐந்து பிரபல நடிகைகள் விபச்சாரம் செய்ததாக மும்பை போலீஸார் அதிரடியாக கைது செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மட்டு.அமிர்தகழியில் 16 முதலைக் குட்டிகள் மீட்பு
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட அமிர்தகழி பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றின் குழியொன்றுக்குள் இருந்து 16க்கும் மேற்பட்ட முதலைக் குட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.
அமிர்தகழி, ஸ்ரீமாணிக்கப் பிள்ளையார் ஆலய வீதியில் உள்ள மனோகரன் என்பவரின் வீட்டின் காணியில் இருந்தே இந்த முதலைக் குட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.
வடமாகாண அமைச்சுப் பதவிகள் அறிவிப்பு- ஐங்கரநேசனுக்கு அமைச்சுப் பதவி கொடுக்க வேண்டாம்: ஈ.பி.ஆர்.எல்.எப்
போருக்குப் பின்னரான சூழலை கருத்திற் கொண்டு உறுப்பினர்களின் தகைமைகள், அனுபவங்கள், நிபுணத்துவங்கள், விருப்பங்கள் போன்றவற்றின் அடிப்படையில் வடமாகாண சபைக்கான அமைச்சுத் தேர்வு இடம்பெற்றுள்ளது என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
ஐங்கரநேசனுக்கு அமைச்சுப்பதவி கொடுக்க வேண்டாம்: ஈ.பி.ஆர்.எல்.எப்/பிரேமச்சந்திரனின் சகோதரர் சர்வேஸ்வரனுக்கு வாங்கி கொடுக்கவே  விருப்பம் தெரிவிப்பு 
பொன்னுத்துரை ஐங்கரநேசனுக்கு வடமாகாண சபையில் அமைச்சர் பதவி கொடுக்க வேண்டாமென அவருடைய கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பீடத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது.
உலகில் மிகப் பெரிய அமைச்சரவையாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அமைச்சரவையை கின்னஸ் சாதனை புத்தகம் தெரிவு செய்துள்ளது.
2005 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் திகதி பதவியேற்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவையில் 52 பேர் இடம்பெற்றனர்.
மத்திய மாகாணசபை: எதிர்க்கட்சியினர் பிரேரித்த உறுப்பினருக்கு ஆளும் கட்சியின் ஒரு பிரிவினர் சார்பாக வாக்களித்துள்ளனர்.ஆளுங்கட்சிக்குள் பிளவு
இலங்கையின் மத்திய மாகாணசபை ஆரம்ப அமர்வின் போது மத்தியில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு எச்சரிக்கை விடுக்கும் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முகநூல் தகவல்களை நம்ப வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.
முகநூல் மோகம் சிறுவர் சமூதாயத்தை சீரழிக்கும் வகையில் அமைந்துள்ளது.
முகநூல் பயன்பாட்டை சட்ட ரீதியாக தடை செய்ய முடியாது என்ற போதிலும் வேறும் வழிகளில் தடை செய்ய முடியும்.

இலங்கையில் புடைவை வியாபாரம் செய்யும் வர்த்தகரான மொகமட் இம்தியாஸ் என்பவர் சென்னையில் இனந்தெரியாத குழுவினரால் கடத்தப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை செவன் வோல்ஸில் அமைந்துள்ள அவரது வீட்டில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஒரு கோடி ரூபாய் கப்பம் கேட்டு இவர் கடத்தப்பட்டுள்ளார்.
இயக்குனர் சற்குணத்திடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டுள்ளாராம் நஸ்ரியா நசீம்.
நய்யாண்டி படத்தில் நஸ்ரியாவுக்கு டூப் வைத்து தொப்புளைக் காட்டிய விவகாரம் லேசாக அணைய ஆரம்பித்திருக்கிறது.
இயக்குனர் சற்குணம் மற்றும் தயாரிப்பாளர் எஸ்.கதிரேசன் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார் நஸ்ரியா.
அதற்குப் பிறகு மீடியா நண்பர்களுக்கு பாடலைத் திரையிட்டுக் காட்டுகிறேன், வேண்டுமானால் நஸ்ரியாவும் பாடலைப் பார்த்து பதில் சொல்லட்டும் என்றும் உறுத்தலாக இருந்தால் அந்தக் காட்சியை நீக்கவும் தயார் என கூறியுள்ளார் சற்குணம்.

ad

ad