புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மே, 2014


 கோடம்பாக்கம் மேம்பாலத்தில் பேருந்து விபத்து : 15 பேர் மருத்துவமனையில் அனுமதி
சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் மேம்பாலத்தில் அய்யப்பந்தாங்கலில் இருந்து புறப்பட்டு வள்ளலார் நகர் சென்ற 37ஜி பேருந்து, மேம்பால சுவற்றில்

துரைமுருகன் அதிலே நல்ல “எக்ஸ்பர்ட்” அவரைக் கேட்டுக் கொள்ளுங்கள்: கலைஞர்

திமுக தலைவர் கலைஞர் சென்னையில் இன்று செய்தியாளர்கள் சந்தித்தார்.
 உச்ச நீதி மன்றத்தில் முல்லைப் பெரியாறு பற்றி வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு தமிழகத்திற்கு சாதகமாக வந்துள்ளதே?

கேரள சட்டத்திற்குக் கடும் கண்டனம்;இந்திய இறையாண்மையைப் பாதுகாக்கும்
நம்பிக்கையைத் தந்துள்ளது: வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழகத்தின் முக்கிய வாழ்வாதார ங்களுள் ஒன்றான முல்லைப்பெரியாறு பிரச்சினையில், உச்சநீதிமன்றம் இன்று
வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை 
 இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று இரவு வேளைகளில்  இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கைதி பரிமாற்ற ஒப்பந்தப்படி இந்திய ஒப்படைக்குமா ? அகதியாக இருக்கும் இந்த 32 பேரை .பெயர் விபரம் இதோ 
தடைப்பட்டியலின் படி இந்தியாவில் உள்ள 32 பேரது பெ பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் இலங்கை அரசு அண்மையில் தடை விதித்துள்ள 424 பெயர் விவரப்பட்டியலில் இந்தியாவில் உள்ளவர்கள் 32 பேருடைய பெயரும் வெளியிடப்பட்டுள்ளது.
 
இலங்கையின் இந்தத் தடை அறிவிப்பை இந்தியா ஏற்றுக் கொள்கின்றதாக இந்தியாவிலிருந்து செய்திகள் கசியத் தொடங்கியுள்ளமையால் இந்த 32 பேரின் கதியும் என்னவாகும் என்பது குறித்து கேள்விக்குறியாகியுள்ளது.
 
 இந்தியாவும் இலங்கையும் கைதிகளை பரஸ்பரம் ஒப்படைக்கும் ஒப்பந்தம் ஒன்றை 2010 ஜூன் மாதம் செய்து கொண்டிருக்கின்றன.
 
இதன்படி பார்த்தால் இலங்கையில் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் தேடப்படும் ஒருவரை இந்தியா வைத்திருந்தால் அவரை ஒப்புவிக்கும்படி இலங்கை கோரும்போது அவரை இந்தியா இலங்கையிடம் ஒப்புவித்தே ஆக வேண்டும். 
 
இப்போது மேற்படி பட்டியலில் உள்ளவர்களில் 32 பேர் இந்தியாவில் உள்ளனர் என்று கூறப்படும் சூழலில் அவர்களை ஒப்படைக்கும்படி இலங்கை கோரினால் இந்தியா என்ன செய்யும் என்று கேள்வி எழுந்துள்ளது. 
 
இவர்களைக் கைது செய்து முறைப்படி இலங்கையிடம் இந்தியா ஒப்படைக்க வேண்டும். ஆனால் ஒரு நாட்டில் இருந்து தப்பித்து இந்தியாவில் அகதிகளாக தஞ்சம் அடைந்த இவர்களை எந்த அடிப்படையில் அந்நாட்டிடமே திரும்ப ஒப்படைப்பது என்பதில் சட்டச் சிக்கல் எழுந்துள்ளது. 
 
இது தொடர்பாக இந்திய மத்திய சட்டத்துறையுடன் மத்திய உள்துறை தீவிரமாக ஆலோசித்து வருகிறது என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
 
மேற்படி 32 பேரும் இந்தியாவிலேயே உள்ளனர் எனத் தனது தடை அறிவிப்புப் பிரகடனத்தில் இலங்கை வெளிப்படுத்தியுள்ளது அவர்களின் விவரம் வருமாறு:- 
 
அப்பாத்துரை அமலன், இராசதுரை சசீகரன், சிவஞானசுந்தரம் சிவகரன், யோகநாதன் திலீபன், சந்தியாபிள்ளை, சிவசேகரன் விஜயநீதன், குணசீலன் ரமணன், குணேந்திர ராஜா ஜெயராஜ், அம்பிகேதேசன் ஜனார்தனன், சந்திரபோஸ் ஜெயரூபன், போலிகாப் அலெக்சாண்டர், நவரத்னம் சதீஸ்வரன், சுப்பிரமணியம் சதீஸ்குமார், கமலதாஸ் 
கௌஷில்யா, ரூபசிங்கம் ஜனகாந்த், ரத்னசிங்கம் நித்தியானந்தம், பரமானந்தன் சிவராமகிருஷ்ணன், தம்பிதுரை சிவசிதம்பரநாதன், அமுதன், அந்திரஹென்னடிகே சமிந்தா தர்ஷனா, நவாஸ் (எ) சுரேஷ், ராஜேந்திரன் மூர்த்தி, சுதர்சன் கயிலநாதன், விக்னேஸ்வரன் பரமேஸ்வரி, விக்னேஸ்வரன் கந்தப்ப முத்தையாபிள்ளை 
 
இதேசமயம் அந்தத் தடை அறிவிப்பில் இந்தியாவில் உள்ள மேலும் 6 பேரின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களின் வசிப்பிட முகவரியையும் இலங்கை அரசு வெளியிட்டுள்ளது. 
 
அதன் விவரம் வருமாறு:- இளங்குமரன் ரஞ்சிதகுமாரி (வாலாஜாபேட்டை). செபஸ்தியன் பிள்ளை ரவிகுமார் (திண்டுக்கல் அகதிகள் முகாம்), கதிர்வேலு சிவஞானசெல்வம் (திருவள்ளுவர் நகர், திருவான்மியூர்,சென்னை), 
அமல்ஆரோக்கியசாமி சந்திரவதனா (ஆதம்பாக்கம், சென்னை), அகநிலா (சேலையூர், சென்னை), தங்கய்யா தங்கம் (முதலியார்குப்பம், காஞ்சிபுரம்). ஆகியோரது பெயர் பட்டியலையும் இலங்கை அரசு வெளியிட்டுள்ளது.

வடக்கில் மீண்டும் ரயில் விபத்க்து .பளை நோக்கி வந்த கடுகதி ரயில் பனிச்சன்குளம் பகுதியில் யானையுடன் மோதியது 
கொழும்பில் இருந்து பளை நோக்கி வந்துகொண்டிருந்த கடுகதி ரயிலில் பனிச்சன்குளம் பகுதியில் யானை ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
யாழ். மாவட்ட அரச அதிபர்- வெளிநாடுகளுக்கான இலங்கைத் தூதுவர்கள் சந்திப்பு 
 வெளிநாடுகளுக்கான இலங்கைத் தூதுவர்கள் இன்று காலை 10 மணியளவில் யாழ். மாவட்ட செயலகத்தில் அரச அதிபரை சந்தித்து கலந்துரையாடினர்.
news














தமிழகம் வந்த அகதிகளின் பிள்ளைகள் மண்டபம் முகாமில் சேர்ப்பு 
இலங்கையில் இருந்து படகு மூலம் அகதிகளாக இந்தியா வந்தவர்களில் சிறுவர்கள் 5 பேரையும் சென்னை புழல் சிறையில் சேர்க்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 
புலம்பெயர்ந்தோர் முதலீடுகள் யாழில் போதாது ; அரச அதிபர் கவலை 
 பெரிய அளவிலான தொழில் முயற்சிகளை மேற்கொள்வதற்கான நல்ல சூழலும் அமைவிடமும் யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்றது. எனவே வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர்ந்தோர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து
நைஜீரியாவில் மேலும் சில சிறுமிகள் ஆயுததாரிகளால் கடத்தல் 
நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள கிராமம் ஒன்றிலிருந்து 12 தொடக்கம் 15 வயதிற்கு உட்பட்ட மேலும் சில சிறுமிகளை போகோ ஹராம் ஆயுததாரிகள் கடத்தியுள்ளனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரிர்களுக்கு மிரட்டல் 
 யாழ்.பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் துண்டுப் பிரசுரங்கள் நேற்றுப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் ஒட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சென்னையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேன், தீவிரவாத அமைப்புகளுடன் தமக்கு உள்ள தொடர்புகளை ஒப்புக் கொண்டுள்ளார்.
பாகிஸ்தானில் தீவிரவாத பயிற்சிப் பெற்ற அவர், சென்னை உயர் நீதிமன்றம், டிவி ஒளிபரப்பு கோபுரம், சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் அமெரிக்க
கிளிநொச்சி கவின்கலை கல்லூரியின் முதலாவது கலைப்பூங்கா  விழா
அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட கிளிநொச்சி பண்டிதர் பரந்தாமன் கவின்கலைக் கல்லூரி தனது மாணவர் மன்ற கலை வெளிப்பாடுகளை அரங்கேற்றியிருந்தது.

அளுத்கம தொடரூந்து நிலையத்தில் இரு தொடரூந்துகள் ஒன்றோடு ஒன்று மோதின 
அளுத்கம ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை இரண்டு ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
அளுத்கம ரயில் நிலையத்தில் நிறுத்திவை
19 ஓட்டங்களால் பெங்களூரை வென்றது மும்பை 
 
Mumbai T20 187/5 (20/20 ov)
Bangalore T20 168/8 (20.0/20 ov)
Mumbai T20 won by 19 runs
Indian T20 League - 27th match

அச்சுவேலி கதிரிப்பாய் படுகொலை சந்தேக நபருக்கு 16 வரை விளக்கமறியல்

யாழ்ப்பாணம் அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் இடம்பெற்ற முக்கொலைக ளுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேக நபரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு

உலக இளைஞர் மாநாடு இன்று ஆரம்பம்

ஹம்பாந்தோட்டையில் ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம்
ஐ.நா. விசேட அதிதிகள் உட்பட 168 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு

6 மே, 2014


2ஜியில் பிரதமர் ஒப்புதலுடனே அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டன :
ஆ.ராசா திட்டவட்டம்


2ஜி விவகாரத்தில் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்கவில்லை. தொலைத்தொடர்பு துறையின் ஆலோசனைகள் குறித்து சக அமைச்சர்களுடன் ஆலோசித்தே முடிவு எடுக்கப்பட்டது
ஆ.ராசா வாக்குமூலத்தின்படி 
மன்மோகன் சிங்கையும்
விசாரிக்க வேண்டும் : பாஜக

 


2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரத்தில் அரசுக்கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக
                                     கொழும்பில் மீண்டும் குறிவைக்கப்படும் தமிழர்கள்
                                                                                                                      கொழும்பு நகரில் அண்மைக் காலமாக தமிழ் மக்களைக் குறிவைத்து மேற்கொள்ளப்

ad

ad