வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம் தங்களை பாதுகாத்துக்கொள்ளுமாறும் பொதுமக்களிடம்; அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.