ராமநாராயணன் உடலுக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி ( படம் ) திரைப்பட இயக்குனரும் ,கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ராமநாராயணன் மறைவையொட்டி அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை
பிரதமர் நரேந்திரமோடி வரும் ஜூன் 29ஆம் தேதி சென்னை வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னையில் பெண்ணை கட்டிப்போட்டு கொலை செய்து கொள்ளை: பெண் வேடமிட்டு மர்ம நபர்கள் துணிகரம்
சென்னை ஜாம்பஜாரை சேர்ந்தவர் சையது அலி என்பவரது மனைவி மெகருன்னிசா. இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது பெண்களை போன்று பர்தா அணிந்து வந்த மர்ம நபர்கள், வெளிநாட்டில் வேலை பார்க்கும் மெகருன்னிசா மகனை தங்களுக்கு தெரியும் என்றும், அவர் அனுப்பியதாகவும் கூறியுள்ளனர்.
இதனை நம்பி அவர் மர்ம நபர்களை வீட்டிற்குள் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மெகருன்னிசாவை கட்டிப்போட்டு கொலை செய்த நபர்கள், வீட்டில் இருந்த 50 பவுன் நகைகள் மற்றும் ரூபாய் 2 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
வீடு திரும்பிய சையது அலி, சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்து, அவர் கொடுத்த தகவலின் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.
சென்னையில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் இருந்து வரும் அகதிகளை திருப்பியனுப்பும் அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் செயற்பாடு ஆபத்தானவை என்று அவுஸ்திரேலியாவின் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது .
நெடுந்தீவு பிரதேச சபைத்தலைவர் ரெக்சியன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கந்தசாமி கமலேந்திரன் உள்ளிட்ட மூவரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
சென்னை : சகமாணவியின் பாலியல் ரீதியான ராகிங் கொடுமையால் மாணவி தற்கொலை
சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த மாணவி ராகிங் கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தற்கொலைக்கு
மாநிலங்களவை இடைத் தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் திங்கள்கிழமையுட
அதிமுக வேட்பாளர் நவநீதிகிருஷ்ணனைத் தவிர, பிரதான கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் யாரும் மனுதாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.
மாநிலங்களவை திமுக வேட்பாளராக இருந்த டி.எம்.செல்வகணபதி, தகுதி இழப்புக்கு உள்ளானதால் அவர் தனது எம்.பி.
ஈராக் போர் பகுதியில் இருந்து 17 இந்தியர்கள் மீட்பு: 120 பேர் சிக்கியிருப்பதாக வெளியுறவுத்துறை தகவல்
ஈராக் போர் பகுதியில் இருந்து 17 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் 120 இந்தியர்கள் சிக்கியிருப்பதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சென்னை சவுகார்ப்பேட்டையில் தீ விபத்து: 14 வாகனங்களில் வந்த வீரர்கள் 4 மணி நேரம் போராட்டம்
சென்னை சவுகார்ப்பேட்டை நாராயணப்பா தெருவில் உள்ள குடோன் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட குடோனில் வாசனை திரவியம், பிளாஸ்டிக் பொருட்கள், ரசாயன பொருட்கள் இருந்துள்ளது.