-
31 ஆக., 2022
சோனியா காந்தியின் தாயார் காலமானார்
கா.பொ.த. உயர்தரப் பரீட்சையில் திறமையை வெளிப்படுத்திய வடக்கு, கிழக்கு மாணவர்கள் (
இந்தநிலையில், உயிரியல் விஞ்ஞானப்பிரிவில் அகில இலங்கையில் முதல் இடம்பெற்ற மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணவன் த.துவாரகேஸ்சையும், பாடசாலையில் உயர்தரத்தில் சாதனை
29 ஆக., 2022
தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்! - தமிழ் தெரு விழாவில் சாணக்கியன்.
இலங்கையினை விட்டு வெளியே வாழ்கின்ற இலட்சக்கணக்கான தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார் |
ஊழல் மதிப்பாய்வுச் சுட்டியில் இலங்கைக்கு 102 ஆவது இடம்!
ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் (TI) நிறுவனத்தின் மிக சமீபத்திய ஊழல் மதிப்பாய்வுச் சுட்டியின் (2021ஆம் வருடத்தின்) அடிப்படையில் இலங்கையானது 102ஆவது இடத்தில் காணப்படுகிறது. |
அடுத்த மாதம் பலாலிக்கு சேவையைத் தொடங்குகிறது எயர் இந்தியா!
பலாலியில் உள்ள யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கான விமான சேவையை எயார் இந்தியா நிறுவனம் அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ, வியாழன் அன்று நடைபெற்ற கூட்டத்தில், எயார் இந்தியா நிறுவனம் அடுத்த மாதம் முதல் வாரத்திற்கு இரண்டு முறை பலாலிக்கு விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார் |
உயிரியல் பிரிவில் துவாரகேஸ் சாதனை!
நேற்று வெளியாகியுள்ள உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி, மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணவன் தமிழ்வாணன் துவாரகேஸ் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளார் |
புலம்பெயர் தமிழர்கள் முன்வைக்கும் பிரச்சினைகளை ஆராய மூவர் குழு!
புலம்பெயர் தமிழர்களால் முன்வைக்கப்படும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு முன்னாள் நீதியரசர் அஷோக டி சில்வா தலைமையில் மூவரடங்கிய குழு ஒன்றை நீதி அமைச்சர் விஜேயதாஷ ராஜபக்ஷ நியமித்துள்ளார் |
26 ஆக., 2022
மரண அறிவித்தல்
யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் ஊரதீவைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும், ஊரெழு பொக்கணை வீதியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சுந்தரலிங்கம் அவர்கள் 25-08-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், குணரத்தினம் மரகதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஸ்ரீகுணபூசணி அவர்களின் அன்புக் கணவரும்,
பர்மிளா, ஜியாமளா(கனடா), சதீஸ், துசாயினி(தொழில்நுட்ப உத்தியோகத்தர்- வீதி, அபிவிருத்தி திணைக்களம், முல்லைத்தீவு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சர்வானந்தன், வதீஸ்வரன்(கனடா), சோபிநாத்(AS Studio), தயாநிதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான அரியபுத்திரன், சின்னராசா மற்றும் பங்கையற்செல்வி, முத்துலிங்கம், சந்திராதேவி, நவரெட்ணம்(பிரான்ஸ்), நாகலட்சுமி(ஜேர்மனி), சண்முகலிங்கம்(பிரான்ஸ்), இராஜேஸ்வரி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி மற்றும் தர்மபூபதி, காலஞ்சென்ற தேவராசா, கல்யாணி, சுந்தரலிங்கம், மங்களேஸ்வரி, கிருபநாதன், தர்சினி, பகீரதன், Dr.பேரின்பநாதன், வயித்திலிங்கம்(கண்ணன் லொட்ஜ்), குபேரநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லாவணியன், கம்சிகா, தன்சிகா, பபிசன், சங்கீதன், யஸ்விகா, சர்விகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-08-2022 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பொக்கணை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
தொடர்புகளுக்கு
- Mobile : +14372386050
- Mobile : +94779057937
- Mobile : +94776182333
- Mobile : +94774715718
- Mobile : +94776102448
- Mobile : +14372359612
- Mobile : +94774432195
அதிமுகவில் ஓபிஎஸ் உடன் இணைந்து செயல்படுவோம் - இயக்குனர் பாக்யராஜ்
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை: ஆறுமுகசாமி ஆணையம் நாளை அறிக்கை தாக்கல்
பதவிக்காலம் முடிந்து நாடு திரும்புகிறார் மிச்செல் பச்சலேட்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள், ஆணையாளர் மிச்செல் பச்சலேட் தனது பதவிக்காலம் அடுத்த வாரம் முடிவடைந்தும் நாடு திரும்ப உள்ளார். பதவியில் இருந்து வெளியேறும் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர், இரண்டாவது தவணை பதவியை நிராகரித்த நிலையில் சிலிக்கு திரும்பவுள்ளார் |
சைபர் போருக்கு தயாராகுமாறு இராணுவத்துக்கு அழைப்பு!
எதிர்காலத்தில் தரை, வான், கடல் மாத்திரமன்றி சைபர் தளத்திலும் யுத்தம் நிகழலாம். எனவே எமது வீரர்கள் அவ்வாறான தொழில்நுட்ப யுத்தத்துக்குத் தேவையான அறிவைப் பெற்றிருக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார் |
கோட்டாவை பிரதமராக ஏற்றுக் கொள்ள நாட்டு மக்கள் முட்டாள்கள் இல்லை!
கோட்டாபய ராஜபக்சவை பிரதமராக்க வேண்டும் என்று சிலர் தெரிவிக்கின்றனர். அது அவர்களின் தேவை, ஆனால் அவருக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்குவதற்கு நாட்டு மக்கள் முட்டாள்கள் அல்ல என ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்தார் |
25 ஆக., 2022
இலங்கை மீதான பயணத்தடையை தளர்த்தவிருக்கும் சுவிஸ்!
இலங்கை மீது விதித்திருந்த கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுவிஸ் அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை இலங்கை உள்நாட்டு சுற்றுலா செயற்பாட்டாளர் சங்கம் வரவேற்றுள்ளது. அத்துடன் சுவிட்சர்லாந்து இலங்கைக்கு ஒரு முக்கியமான சந்தையாகும் என இலங்கை உள்நாட்டு சுற்றுலா சங்கத்தின் தலைவர் நிஷாத் விஜேதுங்க தெரிவித்துள்ளார் |
கொழும்பு :2வது அலை வருகிறதாம்!
24 ஆக., 2022
அதிமுக வழக்குகள்... தலைமை நீதிபதிக்கு வேறு வேலை இல்லை என நினைக்கிறீர்களா? - நீதிபதி கண்டனம்
தொடங்கியது சர்வதேச நாணய நிதிய குழு பேச்சு
சர்வதேச நாணய நிதிய குழுவினருக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை மத்திய வங்கியில் இன்று காலை ஆரம்பமாகியுள்ளது. இந்த கலந்துரையாடலில் நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட குழுவினர் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது |
எரிக்கப்பட்ட கிரீன் எகோ லொட்ஜ் றோகிதவினுடையது என அம்பலம்!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனான ரோஹித ராஜபக்ஷவுக்குச் சொந்தமான சொகுசு ஹோட்டலுக்கு தீ வைத்து எரித்த சம்பவம் குறித்து, கொலன்ன பொலிஸாரால் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் |