புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜன., 2023

துயிலும் இல்லத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் - உடைத்தெறியப்பட்ட பெயர் பலகை

www.pungudutivuswiss.com
மட்டக்களப்பு - கிராண் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் வித்துடல்களுக்கு மேலாக மேற்கொள்ளப்படும் மர நடுகைக்கு எதிராக பாரிய ஆர்ப்பாடமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்குத் தயாராகுங்கள் - சாணக்கியன்

www.pungudutivuswiss.com
மாற்றத்திற்காக போராடியவர்கள் அனைவரும் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு வழக்கு: விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்த சுப்ரீம் கோர்

www.pungudutivuswiss.com
அதிமுக பொதுக்குழு வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. சென்னை, எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜூன் 23-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

தேர்தலை ஒத்திவைக்கும் யோசனை - நாளை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!

www.pungudutivuswiss.com


உள்ளுராட்சி தேர்தலை ஒத்திவைப்பதற்கான யோசனை நாடாளுமன்றில் நாளை முன்வைக்கப்படவுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி தேர்தலை ஒத்திவைப்பதற்கான யோசனை நாடாளுமன்றில் நாளை முன்வைக்கப்படவுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகர சபை உறுப்பினர்களைச் சந்திக்கிறார் ஆளுநர்!

www.pungudutivuswiss.com

யாழ். மாநகர சபையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில்  ஆராய வருமாறு, வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா , மாநகர சபை உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ். மாநகர சபையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய வருமாறு, வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா , மாநகர சபை உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்

ஆளுநரின் அழைப்பு - கூட்டமைப்பு உறுப்பினர்கள் நிராகரிப்பு!

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம் மாநகர சபையில் ஏற்பட்டுள்ள நிலைமைகளை இணக்கப்பாட்டுடன் முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் வடக்கு மாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கமைய ஆளுநரின் செயலாளரினால் அழைப்பு விடுக்கப்பட்ட கூட்டத்தில் தமக்குப் பங்குபற்றும் எண்ணம் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாநகர சபையில் ஏற்பட்டுள்ள நிலைமைகளை இணக்கப்பாட்டுடன் முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் வடக்கு மாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கமைய ஆளுநரின் செயலாளரினால் அழைப்பு விடுக்கப்பட்ட கூட்டத்தில் தமக்குப் பங்குபற்றும் எண்ணம் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்

4 ஜன., 2023

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நாளை சந்திப்பு

www.pungudutivuswiss.com
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் நாளை (05.01.2023) விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.

கொழும்பில் சற்றுமுன் ஆரம்பமான போராட்டம்! பெருமளவு பொலிஸார் குவிப்பு

www.pungudutivuswiss.com
கொழும்பு - கோட்டை புகையிரத நிலையம் முன்பாக சற்றுமுன் ஆர்ப்பாட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 10க்கு முன்னர் தேர்தல் ; வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கான திகதி அறிவிப்பு

www.pungudutivuswiss.com
உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தலுக்குத் தடை கோரி உயர்நீதிமன்றில் மனு!

www.pungudutivuswiss.com

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்தும் நடவடிக்கைகளை தடுத்து எழுத்தாணை ஒன்றினை பிறப்பிக்குமாறு உயர்  நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற இராணுவ  கேர்ணல் டப்ளியூ.எம்.ஆர். விஜேசுந்தர, இந்த எழுத்தாணை மனுவை ( ரிட் மனு) தாக்கல் செய்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்தும் நடவடிக்கைகளை தடுத்து எழுத்தாணை ஒன்றினை பிறப்பிக்குமாறு உயர் நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற இராணுவ கேர்ணல் டப்ளியூ.எம்.ஆர். விஜேசுந்தர, இந்த எழுத்தாணை மனுவை ( ரிட் மனு) தாக்கல் செய்துள்ளார்

இன்று வெளியாகிறது தேர்தல் அறிவிப்பு!

www.pungudutivuswiss.com

340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு கோரும் அறிவித்தல் இன்று மாவட்ட செயலாளர்களால் வெளியிடப்படும் என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அறிவிப்பு வெளியிடப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பின்னர் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று  ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு கோரும் அறிவித்தல் இன்று மாவட்ட செயலாளர்களால் வெளியிடப்படும் என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அறிவிப்பு வெளியிடப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பின்னர் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன

கஞ்சிபான தப்பியோட்டம் - புலனாய்வு அமைப்புகள் மீது அதிருப்தி!

www.pungudutivuswiss.com

பிரபல பாதாள உலக குழு உறுப்பினர் கஞ்சிபானை இம்ரான் ராமேஸ்வரத்தில் பதுங்கியிருப்பதாக வெளியான தகவலை அடுத்து இலங்கையின் புலனாய்வு வலையமைப்பு தொடர்பில் அதிருப்தி நிலை ஏற்பட்டுள்ளது.
அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன  செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.

பிரபல பாதாள உலக குழு உறுப்பினர் கஞ்சிபானை இம்ரான் ராமேஸ்வரத்தில் பதுங்கியிருப்பதாக வெளியான தகவலை அடுத்து இலங்கையின் புலனாய்வு வலையமைப்பு தொடர்பில் அதிருப்தி நிலை ஏற்பட்டுள்ளது. அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தா

வெளிநாடு ஒன்றில் 18 இலங்கை பெண்கள் தலைமறைவு

www.pungudutivuswiss.com

ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் கீழ் பாதுகாப்பு மையங்களில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கைப் பெண்களை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்

இலங்கைக்கு எதிரான முதல் டி-20: இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

www.pungudutivuswiss.com
இலங்கை அணிக்கு எதிரான முதலாவது 20 ஓவர் ஆட்டத்தில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை, இந்தியாவுக்கு வருகை தந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள்

3 ஜன., 2023

வெளிப்படைத்தன்மையுடன் பேச்சுவார்த்தை - போராட்டங்களை நடத்த முடிவு!

www.pungudutivuswiss.com

வடகிழக்கு ஒருங்கிணைப்புக் குழு கடந்த வருடம்  நவம்பர் 8 ம் திகதி ஒருங்கிணைந்த வடகிழக்குக்குள் மீளப் பெறமுடியா சமஸ்டியை  வலியுறுத்தி பிரகடனத்தை வெளியிட்டோம்.  இந்நிலையில் தீர்வு திட்டம் தொடர்பில் ஜனாதிபதி தமிழ் மக்களின் பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பதை வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் வரவேற்கின்றோம் என வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

வடகிழக்கு ஒருங்கிணைப்புக் குழு கடந்த வருடம் நவம்பர் 8 ம் திகதி ஒருங்கிணைந்த வடகிழக்குக்குள் மீளப் பெறமுடியா சமஸ்டியை வலியுறுத்தி பிரகடனத்தை வெளியிட்டோம். இந்நிலையில் தீர்வு திட்டம் தொடர்பில் ஜனாதிபதி தமிழ் மக்களின் பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பதை வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் வரவேற்கின்றோம் என வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்

ரெலோ, புளொட் கடிதம் - சம்பந்தன் உடனடியாக பதிலளிக்க மறுப்பு!

www.pungudutivuswiss.com


தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்வாங்க வேண்டும் என்று வலியுறுத்தி கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் எழுதிய கடிதம் நேற்று மாலை கிடைக்கப் பெற்றதை உறுதிப்படுத்திய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இது தொடர்பில் அவசரப்பட்டு பதிலளிக்க விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்வாங்க வேண்டும் என்று வலியுறுத்தி கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் எழுதிய கடிதம் நேற்று மாலை கிடைக்கப் பெற்றதை உறுதிப்படுத்திய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இது தொடர்பில் அவசரப்பட்டு பதிலளிக்க விரும்பவில்லை என்று தெரிவித்தார்

மார்ச் 4ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தல்?

www.pungudutivuswiss.com



உள்ளூராட்சி சபைத் தேர்தலை மார்ச் 04 ஆம் திகதி நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு ஆராய்ந்துள்ளது. தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் விசேட கூட்டம் இன்று கொழும்பில் நடைபெற்றது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை மார்ச் 04 ஆம் திகதி நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு ஆராய்ந்துள்ளது. தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் விசேட கூட்டம் இன்று கொழும்பில் நடைபெற்றது.

யாழ்.மாநகர சபை உறுப்பினர்களுக்கு ஆளுநர் அழைப்பு

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணம் மாநகர சபையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் நேரில் ஆராய வருமாறு , வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா , மாநகர சபை உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். 

தந்தை செல்வாவுக்கு அருகே நாபா, உமாவுக்கு சிலைகள்!

www.pungudutivuswiss.com


வவுனியா நகர மத்தியில், தந்தை செல்வாவின் சிலைக்கு அருகாமையில், ஈ.பி.ஆர்.எல்.எப்  தலைவர் பத்மநாபா மற்றும் புளொட்  தலைவர் உமாமகேஸ்வரன் ஆகிய இருவருக்கும் சிலை வைப்பதற்கான கட்டுமான பணிகள் இடம்பெற்று வருகின்றது. இதற்கான அனுமதி, வட மாகாண ஆளுநரிடம் பெறப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

வவுனியா நகர மத்தியில், தந்தை செல்வாவின் சிலைக்கு அருகாமையில், ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் பத்மநாபா மற்றும் புளொட் தலைவர் உமாமகேஸ்வரன் ஆகிய இருவருக்கும் சிலை வைப்பதற்கான கட்டுமான பணிகள் இடம்பெற்று வருகின்றது. இதற்கான அனுமதி, வட மாகாண ஆளுநரிடம் பெறப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடத் தயார்!

www.pungudutivuswiss.com


உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுமாறு கோரப்பட்டால் அது குறித்து தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி கலந்தாலோசிக்கும் என அதன் பங்காளிக் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுமாறு கோரப்பட்டால் அது குறித்து தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி கலந்தாலோசிக்கும் என அதன் பங்காளிக் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்

ad

ad